இன்று பல வீடுகளில் நமது வலைப்பூவை வாசித்தவாறு ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கத்துவங்கியுள்ளனர்.ஒரு குடும்பத்துக்கு ஒரே ஒருவர் மட்டும் இவ்வாறு ஜபித்துவருகின்றனர்.(சில குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர்!)
ஓம்சிவசிவஓம் ஜபிப்பவரின் வீட்டில் யாராவது அசைவம் சாப்பிட்டால்,அந்த வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது என வலைப்பதிவில் தெரிவித்திருந்தோம்.
இந்தக் கட்டுப்பாடு தேவையில்லை;மீண்டும் எனது குருநாதரை சந்தித்து இந்த சந்தேகத்தை உறுதிபடுத்திக் கேட்டபோது,ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர் மட்டும் அசைவத்தைத் தவிர்த்தால் போதுமானது;அவர் வசிக்கும் வீட்டில் இருப்பவர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்காத மற்றவர்கள் அசைவம் தினமும் சாப்பிட்டால் கூட அது ஜபிப்பவரை எந்த விதத்திலும் பாதிக்காது என உறுதிபடுத்தினார்.
யாரெல்லாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது என்ற சந்தேகத்தை எனது குருநாதரிடம் விளக்கம் கேட்ட போது பலர் இருந்தபடியால் முழுமையாகவும்,தெளிவாகவும்,விளக்கமாகவும் கேட்க இயல வில்லை;(எனது குருவை சந்திப்பவர்களிடம் இந்த ஓம்சிவசிவஓம் வலைப்பூ நடத்துவதைக் காட்டிக்கொள்ள வில்லை)எனவே, தவறான விளக்கத்தைக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.வாசகர்கள் என்னை மன்னிக்கவும்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment