Sunday, April 22, 2012

கும்பம்,கன்னி,மிதுனம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை


கும்பம்,கன்னி,மிதுனம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை



யுத்தகிரகங்களான செவ்வாய் மிதுனராசியிலிருந்தும்,சனி கன்னிராசியிலிருந்தும் ஒருவரை ஒருவர் 24.7.11 முதல் 10.9.11 வரை பார்த்துக்கொண்டிருப்பதால்,இந்த காலகட்டத்தில் இந்த நான்கு ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

கும்பராசிக்கு 30.11.11 வரை அஷ்டமச்சனியும்,கன்னிராசிக்காரர்களுக்கு 30.11.11 வரை ஏழரைச்சனியில் கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனியும், மிதுனராசிக்காரர்களுக்கு 30.11.11 வரை அரை அஷ்டமச்சனியும் நடைபெற்றுவருவதால்; விருச்சிகராசிக்காரர்கள் 2011,2012 முழுவதும் ஜன்ம ராகு இருப்பதாலும்

10.9.11 வரையிலும் எதிர் பாராத அவமானம்,பயணத்தின் போது நிதானமும்,அலுவலகம்,வீடு,நட்பு,பணிபுரியுமிடம் என எங்கு நோக்கினும் எதிர்பாராத வாக்குவாதம் வந்து அடிதடியில் முடியும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன.இந்த காலகட்டத்தில் முழுச்சுபக்கிரகமான குரு இந்த ராசிக்காரர்களைப் பார்க்காமலிருப்பதால்,முடிந்த வரையிலும் எல்லா விஷயங்களிலும் ஒதுங்கிப்போவது நன்று.

இந்த காலகட்டத்தில் உங்கள் பக்கம் நியாயமிருந்தாலும்,அதை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.எச்சரிக்கை:

ஏதாவது ஒரு கோவிலுக்கு தினமும் செல்வதாலும்;
உங்கள் குலதெய்வக்கோவிலுக்கு தினமும் சென்று வழிபடுவதாலும்;
மனவளக்கலை தியானம் அல்லது வேறு ஏதாவது ஒரு தியானப்பயிற்சியில் ஈடுபடுவதாலும்;
தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவதாலும்;
தினமும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதாலும்;
தினமும் விநாயகர் காயத்ரி மந்திரம் ஜபிப்பதாலும்;
இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்றுவதாலும் 10.9.11 வரை நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டலாம்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment