Sunday, April 22, 2012

சிவதரிசனம் தர உதவும் ஓம்சிவசிவஓம்


நமது வாழ்நாளுக்குள் ஒரு கோடி தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டோமானால்,நமக்கு நிச்சயமாக சிவ தரிசனம் கிடைக்கும்.
கடவுளர்களில் சிவதரிசனமும்,முருக தரிசனமும் ஒரு மனிதனுக்குக் கிடைப்பது அரிதிலும் அரிதான புண்ணியமாகும்.இதற்கு மிஞ்சிய புண்ணியம் இந்த பூவுலகில் இல்லை;

விநாயகர்,பத்திரகாளி,மகா லட்சுமி,மகாவிஷ்ணு,சித்தர்களின் தரிசனம் கிடைப்பது சுலபம்.யாருக்குத் தெரியுமா? ஏதாவது ஒரு தியானம் அல்லது மந்திர ஜபம் செய்துவருபவர்களுக்கு தெய்வ தரிசனம் அல்லது சித்தர் தரிசனம் கிடைக்கும்.அப்படி தரிசித்தவர்களுக்கு பல பிறவிகளாக இந்த தியானம் அல்லது மந்திரஜபம் செய்துதான் இந்த தரிசனத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதை பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை;அதுவும் அவர்களின் கர்மவிதியே!!!

பாவம் புண்ணியம் என்ற சுழலின் அடிப்படையிலேயே நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.இந்தச் சுழலை நிறுத்திட ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் உதவும் என்பது இமாலய சத்தியம்!

பெருமாள் எனப்படும் பரந்தாமனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி உண்டு.சிவதரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறவி இல்லாத முக்தியே கிட்டும்.சிவலோகத்தில் அவசியப்பட்டால்,குறிப்பிட்ட ஆன்மீகப்புரட்சி,ஆன்மீகக்  கடமை செய்ய வேண்டுமெனில்,சிவனது அனுமதியோடு வேண்டுமானால் மீண்டும் பிறக்கலாம்.

ஒருவன் சிவன் கோவில் கட்டவேண்டும் என்று நினைத்தாலே,அவனது ஏழு தலைமுறை முன்னோர்களுக்கு கதி மோட்சம் உண்டு என சிவபுராணம் சொல்லுகிறது.ஒருவன் சிவாலயம் கட்டினால்,அந்த கோவிலில் இருக்கும் ஒவ்வொரு கல்லுக்கும்(கருங்கல்) பத்தாயிரம் சிவ லோக வருடங்கள்(ஒரு சிவலோக வருடம் என்பதே பல லட்சம் பூமி வருடங்கள் ஆகும்) வீதம் சிவலோகத்தில் சுகமாக வாழ்வான் என்பதை உணர்ந்தே நமது முன்னோர்களாகிய சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் தமிழ்நாட்டில் சுமார் 39,000 பிரம்மாண்டமான சிவாலயங்கள் கட்டியுள்ளனர்.இலங்கைக்குத் தெற்கே இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் தூரத்துக்கு எத்தனை சிவாலயம் கட்டியிருந்தார்களோ?
ஓம்சிவசிவஓம் ஒரு கோடி தடவை ஜபிக்க ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 120 ஆண்டுகள் ஆகும்.
எனவே,இன்றே ஆரம்பிப்போம் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை!!!

No comments:

Post a Comment