Saturday, April 21, 2012

சுயச்சார்பு அப்துல்கலாமும்;சுயநல இந்திய ஆள்பவர்களும்


3



கி.பி.2006 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்,இந்தியாவுக்கு வருகை தருவதாக அறிவித்தார்.பாதுகாப்புக்காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகையின் வரவேற்பறை,வராந்தா பகுதி,தரைக் கம்பளங்களை மாற்ற வேண்டும் என்றனர் அமெரிக்க அதிகாரிகள்.



அதோடு, ‘குடியரசுத் தலைவர் மாளிகையை புஷ்ஷின் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்தியப் பாதுகாப்பை நாங்கள் நம்ப மாட்டோம்’ என்றும் அமெரிக்கத் திமிர்த்தனத்தைக் காட்டினர்.

ஆனால்,நமது தேசத்தை நேசிக்கும் நமது நிரந்தர ஜனாதிபதி அப்துல் கலாம் மிகுந்த கண்ணியத்துடனும்,தெளிவான குரலுடனும் இரண்டையும் மறுத்துவிட்டார்.

“உலகப்புகழ் பெற்ற தலைவர்கள்,ஞானிகள் பலரின் பாதம்பட்ட ‘கார்பெட்’களில்,புஷ் அவர்களின் பாதம் படுவது பெருமைக்குரிய விஷயம்.எனவே,அதை மாற்ற இயலாது”என்று இந்தியாவின் சுயமரியாதையை அமெரிக்க அதிகாரிகளுக்கு உணர்த்தினார்.


அத்துடன்,இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் புஷ்ஷை,எங்கள் பாதுகாப்புப் படையினர்,உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்பர்.வேண்டுமானால்,அமெரிக்க காவல் துறையிலிருந்து ஒரே ஒரு அதிகாரி மட்டும் வந்து,மாளிகையின் மேலிருந்து கண்காணிக்கலாம்.அதுவும்,கையில் துப்பாக்கி வைத்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என அப்துல் கலாம் அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.

ஆனால்,இன்று கி.பி.2011 இல் நடப்பது என்ன? அணுசக்தி ஆராய்ச்சியில் யுரேனியத்தை விடவும்,சுலபமாகவும்,அதிகமாகவும் தோரியத்திலிருந்து அணு மின்சாரம் தயாரிக்க முடியும்;தோரியத்திலிருந்து அணு மின்சாரம் தயாரித்தப்பின்பு ஏற்படும் கதிர்வீச்சு யுரேனியத்தைவிடவும்,புளூட்டோனியத்தை விடவும் மிகக்குறைவாகவும் இருக்கிறது.எனவே,வெகு விரைவில் இந்தியாவால் உலகம் முழுவதும் தோரியத்தினால் இயங்கும் அணு உலைகளை நிறுவிட முடியும்; என்பதை கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.உலகம் முழுவதும் கிடைக்கும் தோரியத்தில் 90% தென் மாவட்டங்களான நெல்லை,குமரி மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது என்பதும் அமெரிக்காவை தூங்க விடாமல் செய்துவிட்டது.



இராமர் பாலத்தினால் கடலில் இருந்த தோரியத்துகள்கள் 17,50,000 ஆண்டுகளாக சேகரமாகி சுமார் 4000 சதுர கிலோ மீட்டர்களில்(நாகப்பட்டினம் துவங்கி கன்னியாக்குமரி வரை) தோரியம் பரவிக்கிடக்கிறது என்பதும் அமெரிக்காவின் வல்லரசுத் திமிருக்கு அடியாக விழுந்துவிட்டது.எங்கே அடுத்த நூற்றாண்டு துவங்கும் முன்பாகவே தோரியம் மூலமாக மட்டுமே இந்தியா வல்லரசாகிவிடுமோ? என பயந்து போய்,இந்திய அரசினை மறைமுகமாக மிரட்டி,இராமர் பாலத்தை உடைக்கவும்,சேது கால்வாயைக் கொண்டு வரவும் திட்டமிட்டது.

கூடவே,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட மிகக்குறுகிய கடற்பரப்பை சர்வதேச எல்லைப் பகுதியாக (இந்திய பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே) அறிவிக்க வைத்தது.

இருந்தும் அமெரிக்காவின் பயம் தீர வில்லை;வற்புறுத்தி தன்னுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய வைத்தது.இதன் மூலமாக,தோரியம் மூலமாக அணு மின்சாரம் தயாரிக்கும் ரகசியத்தினையும் திருடிச் சென்றுவிட்டது.

இதுஒருபுறம் நடந்துகொண்டிருக்கையில்,நமது நிஜமான பங்காளி சீனாவோ,அமெரிக்காவின் அத்தனை செல்வாக்குகளையும் சர்வதேச அரங்கில் ஒடுக்கும் திட்டத்துடன் செயல்பட்டு,40 ஆண்டுகளுக்குப்பின்னர் அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

தோரியத்தை அமெரிக்கா இங்கு(கன்னியாகுமரி பக்கம் வந்து திருடும் முன்பாக)இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் நோக்குடன் நுழைந்துள்ளது.

இன்னொரு புறம்,இந்தியாவின் தலையெழுத்தை இத்தாலி நிர்ணயித்துவருகிறது.இதற்கான வரலாற்றுக்காரணங்களை அறிய உலக வரலாற்றில் இனி என்ன நடக்கும்?மூன்று பாகங்கள் என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டு ஆன்மீகக் கடல் வலைப்பதிவுகளை வாசிக்கவும்.

இந்தியாவில் சுதேசத் தொழில்கள் அழிந்து வருவதற்கு உலக மயமாக்கல் காரணம் என கூப்பாடு போட்டு வருகிறோம்.ஆனால்,அது காரணமல்ல;இந்திய குறு மற்றும் சிறு தொழில்களை பாதுகாக்கும் எண்ணமுடைய அரசு வராததே காரணம்.இந்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன? என்பதை அறிய சுதேசிச் செய்தி என்ற மாத இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது.அதற்கான முகவரியை நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம்.ஓராண்டுச் சந்தா ரூ.75/மட்டுமே!

உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் சீன மூலிகை சுவையூட்டியான அஜினோமோட்டோவை உலகம் முழுவதும் தடை செய்துவிட்டனர்.இந்தியாவில் மட்டும் அபாரமாக விற்பனையாகி,இந்தியர்களை நோயாளியாக்கி வருகிறது.ஒரே ஒருமுறை 0.01 கிராம் நமது உணவின் மூலமாக நமது உடலுக்குள் போனாலும் சுமார் 64 விதமான நோய்களை உருவாக்கும் திறனுடையது;புரோட்டாவின் குழம்பான சால்னாவின் ரத்த சிகப்புக்கும்,சிக்கன் முதலான சகலவிதமான அசைவ உணவிலும் அஜினோமோட்டோ சர்வ சாதாரணமாகக் கலக்கப்படுகிறது.

அடுத்த படியாக,மலிவு விலை சீனப்பொருட்கள் இந்தியாவின் சிறு மற்றும் குறுந்தொழில்களை அழித்து வருகிறது.விளைவு? இந்தியா குண்டூசிக்குக் கூட வெளிநாட்டைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

எந்த ஒரு இந்திய அரசியல் வாதிக்கும் இந்தியாவின் நலன் முக்கியமில்லை;ஊழல்! ஊழல்!! ஊழல்!!! தான் இவர்களின் லட்சியம்!!!

மீறி தேசபக்தியாக செயல்படும் இந்திய அரசியல்வாதிகளை தீவிரமாக செயல்படவிடாமல் அமெரிக்காவும்,சீனாவும்,பாகிஸ்தான் மற்றும் இத்தாலி உளவுத்துறையால் மிரட்டப்பட்டுவருகின்றனர்.அதற்கும் திமிறுபவர்கள் கொல்லப்பட்டுவருவது சகஜம்.

இவ்வளவு கடுமையான சூழ்நிலையிருந்தும்,கடவுளின் அருள் நமது இந்தியாவுக்கு இருக்கிறதுதான் ஒரு மாபெரும் அதிசயம்.2014க்குள் ஒரு தேசபக்தி நிறைந்த சர்வாதிகாரி இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறார்.அந்த சர்வாதிகாரி வட பாரதத்தைச் சேர்ந்த மாவீரன் ஆவார்.அந்த மாவீரன் தென் பாரதத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் அரசியலும் கற்றுக் கொண்டிருக்கிறார்.அந்த மாவீரன் சித்தர்களின் ஆசி பெற்றவர் ஆவார்.அவரது ஆட்சிகாலத்தில் பிராடுகளுக்கு மீள முடியாத நிரந்தர இம்சைகள் துவங்கும்.நீதி நேர்மை,தர்மம் என வாழ்ந்து அனைத்தையும் இழந்துவிட்ட நல்ல மனிதர்கள் இந்தியாவின் முக்கிய அரசு,அரசியல்,வெளியுறவு,கொள்கை வகுப்பு,உலக அரசியல் அரங்கில் முத்திரை பதிப்பார்கள்.ஜெய் ஹிந்த்;ஜெய் விஸ்வம்(உலகம்)!!!

No comments:

Post a Comment