Thursday, April 27, 2017

வந்தாரை வாழ வைக்கும் ஊரு;இங்கேயே வாழ்வோரைச் சாகடிக்கும் ஊரு!!!



வந்தாரை வாழ வைக்கும் ஊரு என்பது நம் தமிழ்நாட்டுக்கே உரிய பெருமை!

இங்கேயே வாழ்வோரை சாகடிக்கும் ஊரு என்ற
பெயரையும் நம் தமிழ்நாடு இப்போது பெற்றுக் கொண்டிருக்கிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர், சிவகாசி, மதுரை முதலான மாநகரங்களில் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒரு நாளுக்கு சராசரியாக 1000 பேர் வேலை தேடி வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் ஃபேபிரிக்கேஷன், வெல்டிங் வேலைகளுக்கே வருகின்றனர். இந்த நிலை 1990களில் இருந்தது.

கி.பி.2000 வாக்கில் ராம் தேவ், ஜெயின் கோவில் என்ற பெயரில் சொத்துக்கள், தொழிற்சாலைகள், பண்ணை வீடுகள்,திரைஅரங்குகள், கல்யாண மண்டபங்கள் வாங்கிக்குவித்துக் கொண்டே இருக்கின்றனர். இதைத் தவிர, எந்தத் தொழிலையும் இவர்கள் முறைப்படி செய்வது இல்லை;
தவிர, அப்படி வேலைதேடி வரும் வடநாட்டினருக்கு நம் தமிழ்நாட்டு முதலாளிகள் நம் தமிழ்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து வைக்கும் கொடுமையும் நடக்கிறது.
இப்படியே போனால், 2010 முதல் 2020 க்குள் தமிழக சட்டசபையில் இவர்கள் எம்.எல்.ஏ.வாக நுழைந்து ராஜபக்ஷேவாக மாறி சட்ட ஒழுங்கை தன் வசப்படுத்திவிடுவார்கள்.2030க்குள் தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் சிறுபான்மையினராகிவிடுவோம்.
இது ஓவர் பயம் அல்ல.யதார்த்தம்!!!!
வேண்டுமானால் கோவைத் தொழிலதிபர்களிடம் சர்வே செய்து பார்க்கவும்.

உதாரணமாக 5 டன் இரும்புக்கழிவு அல்லது 20,000 காலண்டர் வாங்குகின்றனர் எனில் அதற்கு பில் இல்லாமல் வாங்கி வட மாநிலங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.இதனால் அரசுக்குப் போக வேண்டிய வரி இழப்பு ஏற்படுகிறது.ஆனால், அதனால் அந்த வடநாட்டினருக்கு மிச்சமாகும் பணம் மட்டும் ஒரு வருடத்துக்கு எத்தனை கோடிகள் தெரியுமா?

கி.பி.2002 இல் பிகார் தலைநகர் பாட்னாவுக்கு ரெயில்வே தேர்வு எழுத நான் போயிருந்தேன்.பாட்னா ரயில் நிலையத்திலேயே என்னை மடக்கி திருப்பி அனுப்பினர் பீகாரிகள்.
தமிழ் தெரிந்தவர்களை வைத்து அவர்கள் சொன்னது:

பரீட்சை எழுதாமல் திரும்பப்போய்விடுங்கள்.மீறிச் சென்றால் பரீட்சை எழுதும் கல்லூரியின் வாசலில் உள்ள எங்கள் ஆட்கள் உங்களை மிரட்டிவிடுவர்.
ஒரு வேளை இந்த பரீட்சையில் பாஸ் ஆகி பீகாருக்கு வந்தால் உன்னைக் கொல்லுவோம்.

நாங்கள் மதராஸிக்கு வந்தால் எங்களை நீ என்ன வேணும் னாலும் செய்துகொள்

ஆகா!!! இந்தியாவில் ஏன் ராஜ்தாக்கரே உருவானார் என இப்போதுதான் புரிகிறது.

போன 2004-2009 மன்மோகனின் காங்கிரஸ் ஆட்சியில் லாலு ரயில் மந்திரியாக இருந்தார் அல்லவா?
அப்போது அவர் செய்த அக்கிரமம் என்ன தெரியுமா?
தகுதியற்ற பீகார்காரர்களை ரெயில்வேயில் தேர்வு மூலமாக ரெயில்வே ஊழியர்களாக்கியதுதான்.
இப்படி தேர்வு செய்வதற்காகவே பீகார் மண்டலத்தின் தேர்வை மும்பையில் நடத்தினார். இதை மோப்பம் பிடித்த ராஜ்தாக்கரே வடநாட்டாரை(பீகாரிகளை) தேர்வு எழுத விடாமல் தடுத்தார்.

No comments:

Post a Comment