Thursday, April 27, 2017

நாத்திகர்கள் பற்றிய உண்மை

கேள்வி:நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர்கள் ஆத்திகத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இந்து மதத்தை மட்டுமே தாக்குகிற நிலைப்பாட்டிற்கு,ஆத்திகர்களாக இருக்கக்கூடியவர்கள் எத்தகைய வெளிப்பாட்டை முன்னிறுத்த வேண்டும்?


பதில்: நாத்திகர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் மொத்த தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட கிடையாது.அது ஒரு மலிவான தந்திரம்நிறைந்த வியாபாரம்! அது தந்தை பெரியாரால் துவக்கப்பட்டது.தந்தை பெரியார் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

அதில் நாத்திகர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இந்துமதஎதிர்ப்பையும்,பிராமண எதிர்ப்பை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.மற்ற விஷயங்களை எல்லாம்விட்டுவிட்டார்கள்.

சமூகநீதி என்று சொல்வார்கள்.ஆனால் தந்தை பெரியார் எழுதிய புத்தகம் இரண்டு ரூபாய்.ஆனால்,திரு.கி.வீரமணி எழுதிய புத்தகம் ரூபாய் இருபது என்று விற்பனை செய்வார்கள்.அதிலேயே ஒரு நீதிஎன்பது அவர்களிடத்திலே கிடையாது.இவர்களெல்லாம் சமூக நீதி பற்றிப்பேசுவது நகைச்சுவையான விஷயம்.

இவர்கள் எல்லாம் அரசியலில் நிற்கவில்லை என்பதற்காக எதுவேண்டுமானாலும் பேசுவார்கள்.ஆனால் திராவிடர் கழகம் என்பது ஆரம்பத்தில் இருந்தே ஆளும்கட்சிகளை ஆதரித்துத்தான் அறிக்கை விடும்.ஏனென்றால்,தாங்கள் செய்கின்ற தொழில்களுக்குப் பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே காரணம் ஆகும்.
நன்றி:பி.எஸ்.பி.அவர்களின் விடியல் மாத இதழ்

No comments:

Post a Comment