Thursday, April 27, 2017

சிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்?







ஜவஹர்லால்நேருவின் தங்கை க்ருஷ்ணா அதிசிங் அவரின் நூல் “நினைவு கசப்பல்ல”தில் படித்த நினைவு;தம்முடைய அண்ணனைக் காண சிறைக்குச் செல்கிறார்.அவருக்கு அளித்துள்ள பொருட்களை கவனிக்கும்போது கண்ணீர் வடிக்கிறார்.இரண்டே இரண்டு சோபாக்கள்,ஒரே ஒரு கட்டில்,நாலே நாலு நாற்காலிகள் போன்றவை!



விநாயக தாமோதர சாவர்க்கரின் கை,கால்களில் மாடுமாதிரி இரும்புச்சங்கிலிகளை மாட்டி செக்கிழுத்து தேங்காய் எண்ணெயை எடுக்க நாள்தோறும் 10 மணி நேரம் இழுத்தார்.சரியான உணவின்றி ‘க்ஷயரோக’பிடித்தவர் மாதிரி,விடுதலைக்கு வழியின்றி,பேசக்கூட மனித சகவாசமின்றி ; ஈ,கொசுக்கடிகளை அந்தமானின் சுட்டெரிக்கும் வெயிலில் சிறை அனுபவித்தவர்.



இந்தியாவுக்கு விடுதலை வந்தது1947 இல் நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தது 1948 இல்.

பி.ஏ.ஆனர்ஸ் மொழிபத்திரிகை படிப்பு முடியும் வரை(1956 இல்)வரை கன்னடம்,ஆங்கிலம் பாடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு,அல்லது மோதிலால் நேருவின் தியாக வாழ்க்கை அல்லது கமலா நேருவின் லட்சிய வாழ்நாள் இப்படி நேருக்குடுமத்தைப் பற்றி பாடங்கள் இல்லாத வருடங்களில்லை;

பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களிலும் எல்லா மாணவ மாணவியரின் மனதில் நேரு கதைகளை திணிக்கும் இம்சை தொடர்ந்து நடத்தினர்.இதை தலையில் நிரப்பிவிட்டால் அதைக் கற்று நாட்டில் ஆசிரியராவர்கள்,பேராசிரியர்கள் செய்திகல் மூலம் ஹரிகதையைப் போல நேருவின் மகிமையைப் பற்றி வருங்கால இந்தியர்களுக்கு விதைக்கிறார்கள்.



சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் தியாகங்களை அறியும் வாய்ப்பு(இதே போல நமது வ.உ.சி.அவர்களின் வாழ்க்கை மற்றும் எத்தனையோ தேசபக்தர்களின் ரத்த வாழ்க்கையை விவரிப்பதில்லை) எதிர்கால இந்தியர்களூக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ் திறமையாக வே செயல்படுகிறது.



எஸ்.எட்.பைரப்பா விஜயகர்நாடகா 17.9.2004. ஆதாரம்:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்149.

No comments:

Post a Comment