Thursday, April 27, 2017

குறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்!!!



நமது கண்களையும்,காதுகளையும் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டால் தியானத்திலும்,தினசரி வாழ்வில் நாமும் ஒரு விஸ்வாமித்ரர் ஆகிவிடமுடியும்.
அதே கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து வைக்க மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதே திரைப்படம் ஆகும்.திரைப்படத் தொழிலில் ஜெயிப்பதற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர்கள்(வீணடித்தவர்கள்?!) பல ஆயிரம் பேர்கள்.


இன்றைய நவீன உலகத்தில் குறும்படங்கள் திரையுலகத்தில் நுழைவதற்கு ஒரு நுழைவுச்சீட்டாக இருக்கிறது.குறும்படம் தயாரிப்பது? இயக்குவது? தொகுப்பது? போன்றவைகளை பயிற்சி வகுப்பாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு நகரத்தில் நிழல் குழுவினர் நடத்திவருகின்றனர்.


பத்துநாட்கள் கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதன் மூலமாக நம்மால் சில நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தை எடுக்கவோ,இயக்கவோ,நடிக்கவோ,தொகுக்கவோ முடியும்.இதற்கான இணைய தளம் நிழல் டாட் இன் ஆகும்.

இன்று நமது இந்து தர்மம் பற்றிய விழிப்புணர்வுக்கு ஏராளமான குறும்படங்கள் எடுக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகியிருக்கிறோம்.பொருத்தமான இயக்குநர்,தயாரிப்பாளர் கிடைப்பதில்லை;இந்து தர்மம் பற்றி நாம் அடுத்த பத்தாண்டுகளில் குறும்படங்கள் எடுக்காவிட்டால்,ஹாலிவுட் இதிலும்  ஆக்கிரமிப்பு செய்துவிடும்.ஜாக்கிரதை!!

No comments:

Post a Comment