Tuesday, August 30, 2016

மறைக்கபட்ட தமிழர் கலைகள் பாகம் – 3

யாளியும் தமிழனும் ஓர் ஆய்வு
யாளி இந்த பெயரையும் விலங்கையும் நாம் கேள்விப்படுவது கோவில்களில் தான். அங்கு தான் இதன் சிற்பம் வைக்கப்பட்டு இருக்கும்.
�இந்த யாளிக்கும் தமிழர்க்கும் என்ன சம்பந்தம் என ஆராய்வோம். அதற்கு முன் யாளி பற்றி தெரிந்து
கொள்வோம்.
_யாளி என்ற விலங்கை பற்றி ஆங்காங்கே கிடைத்த குறிப்புகளை வைத்து கூறுகிறேன்_ இதற்கென தனி நூல்கள் ஒன்று கூட கிடைக்கவில்லை அதான் மிக பெரிய கொடுமை.
🌻யாளி…. ஒரு அரிய வகை சங்ககால விலங்கு அந்த விலங்கு அழிந்துபோன உயிரினம். அது டைனோசர் கால விலங்கு. *இது நம் லெமுரியா மற்றும் தமிழ் நாட்டில் இருந்த விலங்கு,இது தான் அதிகம் பலம் கொண்ட விலங்கு.*
_இது சிம்மயாளி, மகர யாளி , கஜயாளி, ஞமலியாளி, பெரு யாளி(சிறிய வகை ) பெருச்சாளி அல்ல அது போன்ற எலிவகையான யாளி என கூறுகிறார்கள்_
🌻யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது _கஜயாளியும்,சிம்மயாளியும்_ தான் இதை கண்டால் அனைத்துவிலங்குகளும் நடங்கும் டைனோசர் உடபட. இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள் ஒரு யாளி பத்து காட்டுயானைகளுக்கு சமம்,காட்டு யானை என்றால் இப்போது உள்ளவை அல்ல 10000 BC படத்தில் வருமோ அதுபோல பெரியது.
🌻 *இப்படி பட்ட யாளியை நம் தமிழர்கள் எப்படி அடக்கினார்கள் என்று தானே கூறுகிறீர்கள் அது தான் நம் தமிழரின் நுணுக்கமான வீரம்.* 🌻
🌹யாளியை அடக்குபவன் மாவீரனாக இருக்கவேண்டும். அவன் சில மூலிகைகளின் பலம் கொண்டு, யாளியை அடக்கும் ஆற்றல் பெற்றவன் *கஜகேசரி* ஆவன்(வீரன் என்பவன் தனி ஆட்களை சமாளிப்பவன், மாவீரன் என்பவன் நூறு வீரர்களை ஒரே போரில் சமாளிக்கும் திறன் கொண்டவன்)
_இந்த மூலிகைகள் என்னென்ன என சித்தர்கள் பாடல்களில் தெளிவாக உள்ளது.சில மூலிகைகளை உண்டால் யாளியின் பலம் கிடைக்கும் என கொடுத்து இருப்பார்கள். அதை வைத்து யாளியை அடக்கி அதற்க்கு கடிவாளம் போடுவார்கள் பின் அதை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பார்கள்._
🌻ஆனால் பின் வந்தவர்கள் விளக்கவுரையில் ஒரு யாளின் பலத்தோடு பெண்ணை புணரலாம் என தவறாக கொடுத்துள்ளனர். *நான் தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு யாளி பத்து யானைக்கு சமம் என்றால், பத்து யானை பலம் ஒரு பெண்மேல் விழுந்தால் என்ன ஆவது. சற்று கூட யோசிக்காமல் எப்படி இப்படி விளக்கம் எழுதுகிறார்கள் என தெரியவில்லை.*
🌻புணர்தல் என்பதற்க்கு சந்தித்தல் என ஒரு விளக்கம் தொல்காப்பியம் கூறுகிறது
----தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் 108)
🌻யாளியை அடக்கிய மாவீரன் மதிப்பு மிகுந்தவனாக இருந்திருக்கிறான்,அதுவும் கஜயாளி அடக்கியவனை மிகபெரிய தலைவனாக மதிக்கபட்டுள்ளான். _அந்த மாவீரன் பட்ட பெயராக கஜகேசரி என அழைக்கபடுவான் ._ எல்லாம் மூலிகை மூலம்தான் என்றாலும் அதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா.
🌻 கோவில்களில் முகப்புகளில் இந்த யாளியின் உருவம் இருக்க காரணம் இதை கண்டால் _தைரியமான விழிப்புணர்வு கிடைக்கும்_ என்கிறார்கள்.இந்த யாளியின் எழும்புகளில் இருந்து உருவாக்கபட்டதே யாழ் இசை கருவி என்றும் *குறிப்பிட்ட யாழ் மிகவும் அதிகபடியான ஒலியலைகளை கொண்டதாக இருந்தது எனவும் உயிரை கொன்றது எனவும் கூறுகிறார்கள்.*
👉�காலத்தால் இவை அழிந்து மரவகைகளை பயன்படுத்தி யாழ் செய்யபட்டதாக கூறுகிறார்கள்.
🔥யானை, சிங்கம் அமைப்புள்ளதை *கஜயாளி* என்றும்,சிங்கம் போல் உள்ளதை *சிம்மயாளி* என்றும் ஆடுகளைபோல் கொம்பும் சிறிய வால் உள்ளதை *மகரயாளி* என்றும்,நாய்போல் நாக்கு மிக நீளமானதை *ஞமலியாளி* என்றும் பெருச்சாளியை போல் உள்ள சிங்கமுக உயரம் குறைவாக உள்ளதை *பெருயாளி* என்றும் கூறுவர்.
👉�யாளி குறித்த மருத்துவ பாடல்கள் கீழே
நன் முருங்கைத்தழை, நெய்வார்த்துண்ணில்
“யாளி” யென விஞ்சுவார் போகத்தில்(போர்களத்தில்)
_-அகத்தியர்_
நிரச்சொன்னர் மெய்யாம் தகரையை ஒத்த
யாளி(ஆழி),அன்னர்(அன்னம்),புலத்து கையான் தகரை
ஒத்துகால்
_----தேரையர் _
🌻யாளி கற்பனை விலங்கு அல்ல அதற்க்கு லெமுரியா கண்டம் அகழ்வாரச்சி செய்தால் தான் தெரியும் என்பதால் வெளிநாட்டவர் டைனோசர்தான் பலம் வாய்ந்த விலங்கு என்கிறார்கள், ஆனால் _அங்கோர்வாட் கோவிலில் டைனோசரை காட்டிலும் யாளியின் சிற்பம் அதிகம் உள்ளது என இங்கு சுட்டுகிறேன். டைனோசர் உருவம் சில தான் உள்ளன_
🙏�அதில் சில படங்களும், யாளி வகை படங்களும் கீழே தந்துள்ளேன்.
🌻டைனோசர்களை பார்த்து வியக்கும் ஆங்கிலேயர்கள் அதற்க்கு மேலான *யாளியையே கட்டி ஆண்டுள்ளான் என்பது, தமிழனின் வீரத்தை பறை சாற்றும் விதமாக உள்ளது.* கோவில்களில் இதற்கு யாளி சிற்பத்தின் மீது தமிழன் இருப்பது சான்றாக உள்ளது.
🙏�ஆய்வுக்கு உதவிய நூல்கள்.
_1.அகத்தியர் வைத்தியகாவியம்1000_
_2.தேரையர் வைத்திய சாரம்_
_3.அகத்தியர் பரிபூரணம் 1200_
_4.பழங்கால கோவில்கள்(குறிப்புகள்)_
_5.பெரியகோவில் ஆய்வுகள்(குறிப்புகள்)_
_6.போகர் 7000_
🙏�யாளி படங்கள் கீழே கொடுத்துள்ளேன்
🔥உங்கள் சித்தர் அடிமை🔥
ரா.சங்கர்ஈரோடு
🙏�நன்றி 🙏
🌹வாழ்க வளமுடன்🌹

No comments:

Post a Comment