Sunday, May 8, 2016

மரக் கன்று நடுவதை நமது கடமையாக்கிய வல்லரசுகளின் வல்லாதிக்கம்!!!


ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 1700 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன;இதற்குப் பின்னணியில் வல்லரசு நாடுகள்,அந்த வல்லரசு நாடுகளை இயக்கும் 1500 பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன;இவர்களைக் கட்டுப்படுத்தி,பூமியைக் காப்பாற்ற வேண்டிய ஐ.நா.சபையோ வெறும் கட்டைப்பஞ்சாயத்து செய்யும் இடமாக மாறிவிட்டது;


இனி நாம் ஒவ்வொருவரும் தினமும் 3 முதல் 10 மரக்கன்றுகளை நட்டுப் பரமாரிக்க வேண்டும்;இதைத் தவிர வேறு வழியில்லை;


தமிழ்நாட்டில் மரங்களை வெட்டி மொட்டைத் தமிழ்நாடாக்கிய பெருமை நெடுஞ்சாலைத் துறையையே சேரும்;நிருபர்கள் இது பற்றி கேள்வி கேட்டால், ‘ஒரு மரத்தை வெட்டும் நாங்கள் 10 மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கின்றோம்’ என்று கூசாமல் பொய் சொல்கின்றனர்;அரசியல் தலைவர்களை விட அட்டகாசமாக பொய்சொல்வது அதிகாரிகள் தான்!


ஒரு மணி நேர உபதேசத்தை விட,ஒரு மரக்கன்றை நடுவதும்,அதை பரமாரிப்பதுமே சிறந்தது;



நாம் வாழும் பூமியை நாமாவது காப்பாற்றுவோம்!!!

No comments:

Post a Comment