Monday, December 7, 2015

இராகு மஹாதிசை என்ன செய்யும்?


கலியுகம் என்றாலே துன்ப யுகம் தான்;(மூளையின் ரத்த அணுக்களில் இருந்து சூரியனும்,கண்கள் மற்றும் நிணநீரில் இருந்து சந்திரனும்,ரத்தத்தில் இருந்து செவ்வாயும்,எலும்பு மண்டலத்தில் இருந்து சனியும்,நரம்பு மண்டலத்தில் இருந்து புதனும்,இதயத்தில் இருந்து குருவும்,சுக்கிலத்தில் இருந்து சுக்கிரனும்,)ராகு நமது ஜனன உறுப்புக்களில் இருந்து நம்மை இயக்குகிறது;கலியுகத்தில் நம்மில் பலருக்கு 100 பேர்களில் 85 பேர்களுக்கு ராகு மஹாதிசையோ அல்லது ராகு சாரதிசையோ அல்லது ராகுவுடன் சேர்ந்திருக்கும் மஹாதிசைகளில் ஒன்றோ நடைபெற்றுக்கொண்டிருக்கிறது;

எல்லோருக்கும் ராகு காலம் விஷகாலம்! எந்த ஒரு சுபகாரியத்தையும் ராகு காலத்தில் துவக்க மாட்டார்கள்;ஆனால்,ராகு திசை நடப்பில் உள்ளவர்கள்,திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரங்களில் ஒன்றில்(லக்னமாக இருந்தாலும்,லக்னாதிபதி இந்த நட்சத்திரங்களில் நின்றாலும்) பிறந்தவர்களுக்கு ராகு காலமே யோககாலம்;ராகு காலத்தில் துவக்கப்படும் எந்த ஒரு முக்கியகாரியமாக இருந்தாலும் சரி;எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் சரி;வெற்றியைத் தரும்;

ஆங்கில மருந்துகள்,மல்டி லெவல் மார்கெட்டிங்,கமிஷன் கிடைக்கும் தொழில்கள்,விதவை,மனைவியைப் பிரிந்து வாழும் கணவன்,மனைவியை இழந்து வாழும் கணவன்,செயற்கைக்கொள்,விமானம்,செல்போன்,குறுந்தகவல்,
வாட்ஸ் அப்,முகனூல்,டுவிட்டர்,சாட் ரூம்,முறையற்ற உறவு,பொருந்தாத உறவு போன்றவை அனைத்தும் ராகுவின் கட்டுப்பாட்டில் வருகின்றன;

ராகுமஹாதிசை ஒருவருக்கு இப்பிறவியில் நிகழ்கிறது எனில்,அவர் முற்பிறவிகளில் பாம்புக்கு கெடுதி செய்துள்ளார் என்றுதான் அர்த்தம்;லக்னம் மற்றும் 7 ஆம் இடத்தில் ராகு அல்லது கேது நின்று திசை நடத்தினால்,அவர் முற்பிறவிகளில் பாம்புகளில் ஜோடியாக வாழ்ந்தவைகளில் ஒன்றை மட்டும் கொன்றிருக்கிறார் என்று அர்த்தம்;

லக்னத்திற்கு 2 மற்றும் 8 ஆம் இடங்களில் ராகு,கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறப்புகளில் ஜோடியாக வாழ்ந்துவந்த பாம்புகளின் புற்றினை இடித்துத் தரைமட்டமாக்கியவர் என்று அர்த்தம்;

லக்னத்திற்கு 3 மற்றும் 9 ஆம் இடங்களில் ராகு,கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறப்புகளில் வயதான நாகங்கள் மற்றும் நாகக் குஞ்சுகளைக் கொன்றிருக்கிறார் என்பதையே தெரிவிக்கிறது;இதனால்,இவர் பித்ரு தோஷத்தினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்று அர்த்தம்;இத்துடன் சனியும்,செவ்வாயும் சேர்ந்திருந்தால் பாம்புப் பிடிப்பவராக இருந்து,பாம்புகள் வசிப்பிடத்தை தகர்த்தவர் என்று அர்த்தம் கொள்க;

லக்னத்திற்கு 4 மற்றும் 10 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருக்கப் பிறந்து,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தால்,அவர் முற்பிறவிகளில் நாகங்கள் இரைதேட வரும்போது அவைகளை முடமாக்கவோ அல்லது கொல்லவோ செய்தவர் என்று அர்த்தம்.ஜோதிடவிதிப்படி,10 இல் ஒரு பாவியாவது நின்று திசை நடத்தினால் அவன் கோடீஸ்வரன் ஆவான்;ஆனால்,நேர்மையற்ற மற்றும் இழிவான வழிமுறைகளில் ஆக வைக்கும் என்பதை ஜோதிடர்கள் தான் சூழ்நிலை அறிந்து தெரிவிக்கவேண்டும்;இவ்விடங்களில் குரு பார்க்க,ராகு மஹாதிசை நடைபெற்றால்,செய்த தவறுகள் மற்றும் நாகங்களுக்குக் கெடுதி செய்தததை முற்பிறவியிலேயே உணர்ந்து,மனம் திருந்தி வாழவே இப்பிறவி எடுத்துள்ளார் என்று அர்த்தமாகும்;

லக்னத்துக்கு 5 மற்றும் 11 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் நின்று திசை நடத்தினால்,பிறர் மனத்தைப் படிக்கும் ஆற்றலுடன் பிறந்தவர் என்று அர்த்தம்;அதேசமயம்,முற்பிறவிகளில் நாகங்களை குடும்பத்துடன் அழித்தவர் என்று அர்த்தம்;கடுமையான பித்ரு தோஷத்துடன் வாழ்ந்து வருபவர்;பிறருக்கு உதவி செய்து,தனது முன்னேற்றத்திற்கு வழிதெரியாமல் திண்டாடுபவர் என்றும் அர்த்தமாகும்;

லக்னத்துக்கு 6 மற்றும் 12 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் நின்று திசை நடத்தினால்,முற்பிறவிகளில் நாகங்களுக்கு நன்மை செய்தவர் என்று அர்த்தம்;இது மட்டுமே சர்ப்பத்தால் தோஷமடையாத ஜாதகர் என்று அர்த்தம்;

ராகு மஹாதிசை நிகழும் போது,மிதமிஞ்சிய சிற்றின்ப ஆசையை ராகு பகவான் தூண்டிவிடுவார்;அதில் இருந்து மீள,அசைவம் சாப்பிடுவதைத் தவிர்த்து,தினமும் ஓம் வராகி சிவசக்தி ஒம் என்ற மந்திரத்தை காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபித்து வருவது அவசியம்;பிரபஞ்ச அன்னை வராகியின் அருள் கிடைத்துவிட்டால் எந்த ஒரு நவக்கிரகத்தின் தீய பாதிப்பு நம்மை நெருங்காது;

ராகு மஹாதிசைக்குப் பிறகு குரு மஹாதிசையும்,கேது மஹாதிசைக்குப் பிறகு சுக்கிரமஹாதிசையும் வருவதைப் போல காலமானது நிர்ணயம் செய்திருக்கின்றது;இதை உணர்ந்தவர்கள் பிறப்பின் ரகசியம்,இறைசக்தியின் ரகசியம்,தமது வாழ்க்கையின் ரகசியத்தை தாமே கண்டுபிடித்துவிடுவார்கள்:


ஓம் வராகி சிவசக்தி ஒம்

No comments:

Post a Comment