Thursday, December 17, 2015

பால்கன் நார்ஸ்டர்டாமஸ்


பல்கேரியாவில் ஒருவர் வாழ்ந்துவந்தார்;அவரது பெயர் வெஞ்செலியா பண்டவா டிமிட் ரோவா;இவர் 12 வயது வரை சராசரி வாழ்க்கை வாழ்ந்து வந்தார்;12 வது வயதில் இவருக்கு புயல் ஒன்றில் சிக்கியதன் மூலமாக கண்பார்வை பறிபோனது;அதன் பிறகு,இவர் நடக்க போகும் சம்பவங்களை சொல்ல ஆரம்பித்தார்;தமிழில் இதை தீர்க்க தரிசனம் என்று கூறுவர்;

இரட்டை மாடித் தாக்குதல்,அமெரிக்கா,2004 சுனாமி,கறுப்பினத்தைச் சேர்ந்தவர் அமெரிக்காவின் அதிபராவது(பராக் ஒபாமா) போன்றவைகளை முன் கூட்டியே கூறியவர்;இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பைப் பற்றியும் கூறியுள்ளார்;

2010 முதல் 2016க்குள் அணுஆயுத யுத்தம் உண்டாகும்.இதனால் ஐரோப்பாவே காலியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்;பராக் ஒபாமா தான் அமெரிக்காவின் கடைசி அதிபர் என்று கூறியுள்ளார்;இதற்குரிய அர்த்தம் என்னவென்று தெரியவில்லை;2016 வாக்கில் அமெரிக்காவை தொடர்ந்து புயல் தாக்குமா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் தாக்குதல் நேரடியாக அமெரிக்காவையே தாக்குமா? அல்லது பூகம்பத்தால் அமெரிக்காவின் பெரும்பகுதி அழியுமா? என்று தெரியவில்லை;இவையெல்லாம் ஒரு யூகமே!

2043 வாக்கில் ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இஸ்லாமியக் குடியரசு உருவாகும்;

2130 ஆம் ஆண்டு வாக்கில் பூமியில் மனிதர்கள் தண்ணீருக்குள் வாழ ஆரம்பிப்பார்கள்;அப்படி வாழ வேற்றுக்கிரக மனிதர்கள் உதவி செய்வார்கள்;

3005 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய்க்கிரகத்தில் பெரிய போர்(?!) வெடிக்குமாம்;
இவையெல்லாம் இவர் கணித்திருப்பது;

இவர் 1996 ஆம் ஆண்டில் மறைந்துவிட்டார்;



No comments:

Post a Comment