Saturday, December 19, 2015

எமது ஜோதிட அனுபவங்கள்-1


அது ஒரு சிறுகிராமம்; ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து வரும்;அங்கே ஒரு நண்பர் எம்மை அழைத்துச் சென்றார்;ஒரு நாள் முழுக்கவும் அங்கேயே இருந்து அந்த கிராமத்தில் வசிப்பவர்களுக்கு ஜாதகம் பலன் சொல்லிக் கொண்டு இருந்தோம்;

ஒரு இளைஞர் வந்தார்;அவரது ஜாதகத்தைப்பார்க்கும் போது,அவரது முன்னோர்கள் செய்த தவறுகள் இவரது திருமண வாழ்க்கையைத் தடுத்துநிறுத்தியிருக்கின்றது;வயதோ 30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது;

சுமாராக 42 ஆலயங்களுக்கு ஒரு வருடத்திற்குள் சென்று வந்தால் மட்டுமே அந்த இளைஞருக்கு திருமணம் நடக்கும்;இல்லாவிடில்,இந்தப் பிறவியில் திருமணமே நடக்காது;என்ன செய்ய? இந்த இளைஞனது குடும்பப் பின்னணி மிகவும் வறிய நிலையில் இருக்கின்றது;
நீண்ட யோசனைக்குப் பிறகு,அந்த இளைஞனை 3 முறை அண்ணாமலைக்குச் சென்று வரும்படி பரிகாரம் கூறினோம்;அந்த 3 முறையும் அவரது பிறந்த நட்சத்திர நாளன்று செல்லும் விதமாக எழுதிக் கொடுத்தோம்;

அடுத்த ஒரு மாதத்திற்குள் அந்த இளைஞர் ஒருமுறை அண்ணாமலைக்கு சென்று கிரிவலம் முடித்துவிட்டு,தமது கிராமத்திற்குத் திரும்பினார்;
திரும்பிய மறுநாளே,பெரும் தொழிலதிபர் ஒருவர்,இவரை மருமகனாக்கிக் கொண்டார்;இந்த சம்பவம் 2009 இல் நிகழ்ந்தது;

எல்லாம் அண்ணாமலையாரின் அருள்!

திருமண ஜோதிடர் கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.

9092116990  9364231011

No comments:

Post a Comment