Tuesday, December 29, 2015

ஸ்ரீமகாவராகி மங்கள ஆரத்திப் பாடல்


ஜெய் ஜெகதீஸ்வரியே! அம்மா அகிலாண்டேஸ்வரியே!
அம்மா அகிலாண்டேஸ்வரியே!!
அண்ட சராசரம் அன்புடன் படைத்தாய்;
அண்ட சராசரம் அன்புடன் படைத்தாய்;
அன்புடன் எழுந்தருள்வாய்
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

செல்வச் செழிப்பினைத் தந்தருள்வாயே
ஸ்ரீபரமேஸ்வரி, அம்மா ஸ்ரீபரமேஸ்வரி
தண்டினியாய் வந்து பகை விரட்டிடுவாய்
தண்டினியாய் வந்து பகை விரட்டிடுவாய்
அம்மா வராகமுகி
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

உயிரினை வளர்க்கும் உடல் நலம் காக்க
மாரியாய் எழுந்தருள்வாய்
அம்மா மாரியாய் எழுந்தருள்வாய்
ஆத்மா நீ என்றறிந்திடச் செய்வாய்
ஸ்ரீகாமேஸ்வரி
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்
தலைமை ஏற்றிடுவாய்,அம்மா தலைமை ஏற்றிடுவாய்
மங்கள ஆரத்தி ஏற்பாய்
மங்கள ஆரத்தி ஏற்பாய்
மங்கள ரூபிணியே
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

வாராகி வாராகி ஓம்
க்ஷம் வாராகி வாராகி வாராகி ஓம்
வாராகி வாராகி ஓம் க்ஷம்
வாராகி வாராகி ஓம் க்ஷம்
வாராகி வாராகி ஓம்
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!!


No comments:

Post a Comment