Wednesday, December 19, 2012

புத்திரபாக்கியத்தைத் தரும் வேற்குழலி வேட்கை பாராயணம்!!!

வேற்குழவி வேட்கை




11.8.2012 ஆன்மிக மலர் இதழில் விஐபி பூஜையறை பேட்டியில் டாக்டர் சிவகடாட்சம், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருபரதாச சுவாமிகள் அருளிச்செய்த வேற்குழவி
வேட்கை பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். பலநூறு வாசகர்கள் அந்தப் பாடலைப் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்காகவும், பொதுவாக
அனைத்து வாசகர்கள் நன்மைக்காகவும் அந்தப் பாடல் தொகுப்பை இங்கே வெளியிடுகிறோம்:

பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே   

1. சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே   

 2. பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே   

3. பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர நல்க வாராயோ உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே  

 4. எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ   

5. முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ   

6. ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ  

 7. பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ   

8. கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே   

9.மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ  

 10. இப்பதிகத்தை பாராயணம் செய்து வந்தால் புத்திரதோஷம் நீங்கி, சந்ததி விருத்தியாகும். குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகள்
பிறக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஆன்மிக அருமருந்து இந்தத் துதி.: நன்றி:தினகரன்,ஆன்மீகமலர் 8.9.12  ஒரு நாளுக்கு ஒன்பது முறை நமது வீட்டுப்பூஜை அறையில் ஜபிக்க வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 27 நாட்கள் ஜபித்து வந்தால், நிச்சயமாக புத்திர தோஷம் நீங்கி,குழந்தை பிறக்கும்;தமிழ்நாட்டில் சில ஆயிரம்பேர்களுக்கு இவ்வாறு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது.

 ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment