Wednesday, December 26, 2012

இந்தியாவிற்கு நாலாபுறமும் ஆபத்து தான்: மோகன்பாகவத் பேச்சு


மீரட்: சீனாவால் மட்டுமல்ல இந்தியாவைச் சுற்றியுள்ள நான்கு திசைகளில் இருந்து இந்தியாவிற்கு ஆபத்து அதிகரித்துவருகிறது என ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் கூறினார். உத்திரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள மாதவ்கஞ்ச் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மூன்றுநாள் முகாம் நடந்தது.
முகாமில் இறுதிநாளான நேற்று கொண்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது: சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நம் நாட்டிற்கு பெரும் ஆபத்து தான். சீனா மட்டுமல்ல அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் உள்ளிட்ட நாலாபுறங்களிலும் இந்தியா பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. இதனை ஒரு போதும் விட்டுவைக்க கூடாது. இந்நாடுகள் இந்தியாவிற்கு எதிராக போர்க்குணத்துடன் உள்ளன.
டில்லியில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டிற்கு துயரமான ஒன்றை ஏற்படுத்திவிட்டது. தலைநகருக்கு இப்படி களங்கம் ஏற்பட்டது வேதனை அளிக்கிறது. இதிலிருந்து டில்லிநகரில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு ‌மோகன்பாகவத் கூறினார்.

No comments:

Post a Comment