Thursday, December 13, 2012

அமெரிக்கமயமாக்கலால் வரும் பேரழிவு!!!




எங்களது உணவுப்பண்டங்களைக் குளிரூட்ட
ஓசோன் படலம் ஓட்டையாகி வருகிறது;
நாங்கள் வாகனங்களில் விரைவதற்காக
துருவ பனிப்பாறைகள் உருகுகின்றன;

எங்கள் எரிபொருள் தேவைக்காக
மரங்கள் கரியாகி வருகின்றன;
நாங்கள் குடியிருப்புகளைக் கட்டுவதற்காக
வனங்கள் மொட்டையடிக்கப் படுகின்றன;
நதிகளின் பெண்மை சிதைக்கப்படுகின்றன;
பூமியின் நீர்வளம் வற்றவைக்கப் போராடுகிறோம்;

எங்களது உணவுத் தேவைக்காகவும்
இன்னபிற வசதிக்காகவும்
தினமும் மிருகங்கள் செத்து மடிகின்றன;

எங்களில் சிலரது சுயநலத்துக்காக
எங்களின் சம்பளம் நூதனமாக திருடப்படுகிறது;
நாங்களும் வறுமைக் கோட்டிற்குள் வரத்துவங்கியிருக்கிறோம்;

முதலாளித்துவம் உலகமயமாகுவதால்
அழிவு ஒன்றுதான் நிலைப்பேறுடையது;
ஆனால்,ரேஷன் முறையில் வருகிறது;
வாழ்வு என்பது வேறொன்றுமில்லை;
அழிவைச் சற்று ஒத்தி போடுவது-
பன்னாட்டு நிறுவனங்களின் லாபசதவீத வளர்ச்சிக்காக!

ஆயினும் எங்கள் அவசர யுகத்தில்
தூண்டப்பட்ட பெரிய ஆசைகளின் பூர்த்திக்காக
வாழ்க்கை வசதிகள் என்ற பெயரில்
அழிவை நாங்கள் உலகளவில் அருகழைத்துக் கொள்கிறோம்;

நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 20,வெளியீடு டிசம்பர் 2012


No comments:

Post a Comment