Saturday, October 30, 2010

இந்தியாவுக்கு தேவை ஒரு தேசபக்தி நிறைந்த சர்வதிகாரி :மறுபதிப்பு

இந்தியா ஒரு நடுநிலையுள்ள நாடா?

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா என அமெரிக்கா அடிக்கடி சொல்லும்.இதற்கு அர்த்தம் அமெரிக்காவால் நினைத்ததை சாதிக்கமுடியும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அர்த்தம்.

நிஜத்தில் நாம் நமது வெளியுறவுக்கொள்கை,உலக அரங்கில் நமது ஆளுமைத்திறன்,நமது செயல்படும் விதம் இவற்றை மாற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வந்து 15 ஆண்டுகளாகிவிட்டன.ஆனால்,அரசியல் நிலைத்தன்மை (ஒரே கட்சி வலிமையாக மத்திய அரசை உருவாக்கும் அளவிற்கு வளராமை) இல்லாததால்,நாம் இன்னும் நமது நட்புநாடுகளிடமும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.இது மிகப்பெரிய தவறு என்பதை உலக வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

1940 களில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததும்,உலகப்பொருளாதார மந்தம் ஏற்பட்டது.மீண்டும் உலகளவில் இப்படிப்பட்ட பொருளாதார மந்தம் ஏற்படாமல் இருக்க டங்கல் திட்டம் என்ற கொள்கைவரைவு உருவாக்கப்பட்டது.ஆர்தர் டங்கல் என்ற வக்கீல் இந்தத் திட்டத்தை உருவாக்கினார் என்று கூறப்பட்டது.இவரின் அந்தரங்க உதவியாளர் ஒரு இந்தியர்.இவரே இந்த திட்டத்தினை வடிவமைத்தார் என்பது பலருக்குத் தெரியாது.
இந்தத் திட்டத்தின்படி,உலகநாடுகள் அனைத்தும் இந்த டங்கல் திட்டத்தில் கையெழுத்திடவேண்டும்.கையெழுத்திட்ட நாள் முதல் இந்த டங்கல் திட்ட உறுப்புநாடுகளுக்குள் யார் வேண்டுமானாலும்,எந்தப்பொருளை வேண்டுமானாலும் குறைந்த விலையில் எத்தனை நாடுகளுக்கு வேண்டுமானாலும் விற்கலாம்;வாங்கலாம்;
கி.பி.1945 முதல் கி.பி.1995 வரை டங்கல் திட்டம் பேசி, பேசி முடிவு எடுக்கப்பட்டது.கி.பி.1945 முதல் நமது இந்தியா டங்கல் திட்டத்தில் உறுப்பினராக செயல்பட்டுவருகிறது.கி.பி.1990 முதல் டங்கல் திட்டத்தினுள் ஜி.8 எனப்படும் உலக வல்லரசு நாடுகள் ஊடுருவ ஆரம்பித்தன.டங்கல் திட்டத்தை தனது இஷ்டத்திற்கு வளைக்கும் விதமாக டங்கல் திட்டத்தின் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டன.இதன்படி, பணக்கார நாடுகள் மேலும் பணக்காரர்களாகவும்,ஏழைநாடுகள் மேலும் ஏழை நாடுகளாக்கவும் விதமாக திட்டமிடப்பட்டன.ஏழை நாடுகளின் தலைவனாக இந்தியா பார்க்கப்பட்டது.1.1.1995 அன்று உலகம் முழுவதும் இருக்கும் 220 நாடுகளில் 185 நாடுகள் டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டன.1.1.1995 ஆம் நாளிலிருந்து டங்கல் திட்டம் 185 நாடுகளில் நடைமுறைக்கு வந்தது.அன்று முதல், 185 நாடுகளில் வாழும் எந்த மனிதனும் யாருக்கும் எந்தப்பொருளையும் குறைந்த விலைக்கு வாங்கலாம்;விற்கலாம்; என்ற நிலை உருவாகிவிட்டது.மேலோட்டமாக இது ஜனநாயக வர்த்தகம் என்று இருந்தாலும்,பேராசை மேலும் மேலும் பேராசை என்ற கொள்கையை உலக மயமாக்கக் காரணமாகிவிட்டன.கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் மேலும் மேலும் பணம் சம்பாதிப்பதற்கு டங்கல் திட்டம் காரணமாகிவிட்டது.


ஆளும் கட்சியின் ஆதரவுடன் துவங்கப்பட்ட பூமாலை என்ற வீடியோ பத்திரிகை இன்று சன் டிவியாக பரிணமித்து, மொத்த தமிழ்நாட்டின் பொழுதுபோக்குத் தொழிலையும் தனது முழுக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்துவிட்டது.இன்று சன் டிவி இந்தியாவின் ஆறுமொழிகளிலும், தமிழ் சன் டிவி வளைகுடாநாடுகள், அமெரிக்கா,கனடா, தென் ஆப்ரிக்கா,ஆஸ்திரேலியா,மலேஷியா,சிங்கப்பூர் என உலகம் முழுவதும் ஒளிபரப்புமளவிற்கு ஆலமரமாக வளர்ந்துவிட்டது.15 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட சன் டிவியின் இன்றைய ஒரு நாள் நிகர லாபம் (எல்லா செலவுகளும் போக) ரூ.1000 கோடிகள் ஆகும்.
பிரான்ஸின் எஃப் டிவி இன்று இந்தியா முழுக்க ஒளிபரப்பாகவும் டங்கல் திட்டமே காரணமாகும்.டி.வி.எஸ்.நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களை ஆசியா முழுக்க தயாரித்து விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.அமெரிக்காவின்,பிரான்ஸின்,இங்கிலாந்தின் இரு சக்கர வாகனங்கள் இந்தியாவிலும் கிடைக்கத்துவங்கியுள்ளன.
இதுபோன்ற சூழ்நிலையில்,இந்தியா அணிசேரா இயக்கத்தின் தலைவராகவும்,வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தில் சேராமலும் இருந்து வந்தது.ஆனால்,இந்தியாவை தனது இஷ்டத்திற்கு வளைக்க ஆரம்பித்தது அமெரிக்கா!

1950 களில் சீனாவின் ஆக்கிரமிப்புப் பேராசை துவங்கியது.புத்தர் ஞானம் பெற்ற கயா நமது இந்தியாவில் இருப்பதால்,புத்த மத நாடுகளின் புத்த தலைமை குருக்கள் இந்தியாவை தனது குருகுலமாக,ஆசானாக மதித்துக்கொண்டிருக்கிறது.புத்த மதத்தின் நாடுகளாக இலங்கை,திபத்,சீனா,தாய்லாந்து இருக்கின்றன.இதில் புத்த மதத்தை தனது உயிர் மூச்சாகக்கொண்டிருக்கும் நாடு திபத் ஆகும்.இந்த திபத்தினை சீனா தனது அடக்குமுறையால் ஆக்கிரமித்துக்கொண்டது.நமது(இந்தியாவின்) சீடன் எனப்போற்றப்படும் திபத் இவ்வாறு ஆக்கிரமித்ததைக்கண்டு நாம்(இந்தியா) ஒரே ஒரு எச்சரிக்கை அறிக்கை கூட விடவில்லை;இது பேடித்தனமேதான்.
திபத்தில் புத்தமதத்தின் சம்பிரதாயங்கள் ரவுடி சீனாவால் அழிக்கப்பட்டன;சிதைக்கப்பட்டன.திபத் சீன மயமானது.இந்தியாவாகிய நாம் இதை எதிர்த்து இருமக்கூட செய்யவில்லை;
கி.பி.2007 ஆம் ஆண்டு வந்தது.உலகின் ஒரே இந்து மத நாடான நேபாளம் கம்யூனிச நாடாக மாறியது.ஆயுதம் ஏந்திப் போராடி வந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சீனாவின் மறைமுக ஆதரவுடன் நேபாளத்தின் ஆளுங்கட்சியாக பரிணமித்தது.இப்போதும் இந்தியாவாகிய நாம் இதை எதிர்க்கவில்லை;எல்லா ராணுவ பலங்களும்,ராஜதந்திர வலிமையும்,அரசியல் நுண்ணறிவு இருந்தும் கூட நமது நண்பன் நேபாளம் சிதைவதைப் பார்த்து நாம் பரிதாபப் பார்வை கூட பார்க்க வில்லை;
உலக சமாதானப்புறா என புகழப்படும் ஜவஹர்லால் நேருவின் பஞ்சதந்திரக்கொள்கையை பாம்புகளை தின்னும் சீனா பஞ்சு மிட்டாய்க் கொள்கையாக மாற்றிவிட்டது.அப்போதே,ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவர் மாதவ சதாசிவ கோல்வல்கர் எனப்படும் குருஜி சீனாவின் நயவஞ்சகத்தை எடுத்துரைத்தார்.நேருவின் காது அப்போது சமாதானக்காதலால் செவிடாகிப்போனது.இந்தியாவின் மானம் கப்பலேறியது.இந்தியா சீனாப்போரில் நாம் 50,000 சதுர கிலோ மீட்டர்களை சீனாவிடம் இழந்தோம்.ஆம்! சீனா நமது 50,000 கிலோ மீட்டர் நிலப்பரப்பை இழந்தது.இந்த ஆக்கிரமிப்பு பற்றி,இந்தியப் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பிக்களே கேள்விகேட்டு நேருவை தர்மசங்கடப்படுத்தினர்.
அதற்கு நேரு, “ சீனா ஆக்கிரமித்த இந்தியப்பகுதி வெறும் புல் பூண்டு கூட முளைக்காத பகுதி.அது நம்மிடம் இருந்தால் என்ன? சீனாவிடம் இருந்தால் என்ன?” என தனது இந்திய ‘தேசபக்தியை’வெளிப்படுத்தினார்.உடனே, ஒரு காங்கிரஸ் எம்.பி.எழுந்து வேகமாக நேரு அருகே வந்து, வெடுக்கென நேருவின் கதர் குல்லாயை எடுத்து, ‘இங்கே கூடத்தான் ஒரு மயிர் கூட முளைக்கவில்லை;அதற்காக இந்தத் தலையை சீனாவிடம் ஒப்படைத்துவிடலாமா’ என ஆக்ரோஷமாகக் கத்தினார்.பாராளுமன்றமே சிரித்தது.
இந்த சம்பவத்திற்குப்பிறகே,சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்க இந்திய ராணுவத்தை நேரு அனுப்பினார்.
மறுபுறம், இந்தியா பாகிஸ்தான் போருக்குப்பின்னர், பாகிஸ்தான் ஒரு விஷயத்தை தெளிவாகப்புரிந்து கொண்டது. “ஒருபோதும் நேரடியாக இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்காது” .இதன் விளைவுதான் உலகிலேயே தீவிரவாதத்தை மட்டுமே இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரே நாடு பாகிஸ்தான்.இந்த ஏற்றுமதியை நிறுத்திவிட காங்கிரஸ் கட்சி இது வரை ஒன்றுமே செய்யவில்லை;இதில் அமெரிக்காவின் தலையீடு வேறு.
பாகிஸ்தானின் வெளிநாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் வளர்ச்சி அமெரிக்காவின் இரட்டை மாடித் தாக்குதல் வரை விஸ்வரூபமெடுத்தது.இருந்தும் அமெரிக்காவுக்கு புத்தி வரவில்லை;வருடம் தோறும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பல கோடி டாலர்கள் பணம்,ஆயுதங்கள்,பொருளாதார உதவியை இன்று 2010 வரையிலும் வழங்கிக் கொண்டேஇருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்திட அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நேரமில்லை.நாம் இன்னும் நடுநிலை என்ற சோம்பேறித்தனத்தை கொள்ளையாக (கொள்கையாக) வைத்திருக்கிறோம்.

பாகிஸ்தானை அடக்கி ஒடுக்கும்படி நாம் ஒரு நாளும் அமெரிக்காவை மிரட்டியதே இல்லை.விளைவு? பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பாராளுமன்றத்தையே தாக்கினர்.நாம் கொஞ்சம் கூட ரோஷப்படவில்லை;(இந்தியா ஒருநாளாவது ரோஷப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அணுகுண்டு தயாரிக்க சர்வ உதவிகளையும் செய்தது.இன்று இந்தியாவாகிய நம்மால் அணுகுண்டைக் காட்டி பாகிஸ்தானை மிரட்டிட முடியாத அரசியல் சாதுர்யத்தை அமெரிக்கா உருவாக்கிவிட்டது.தற்போது, சீனாவானது பாகிஸ்தானுக்கு ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தினை வழங்கிவிட்டது.இதையும் அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை)
நாம்(இந்தியா) நடுநிலை என்ற சுத்தமில்லாத கழிவறையிலேயே இன்னும் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.அதன் துர்நாற்றம் (தீவிரவாதத் தாக்குதலால் ஏற்படும் எனது இந்திய சகோதரர்களின் மரணங்கள்) இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்பு,அரசியல் தலைமைக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையைத் தரவில்லை.ஏனெனில், செத்தது சோனியாவின் சொந்தமா? எம்.கே.நாராயணனின் சொந்தமா?மன்மோகனின் சொந்தமா? யாரோ ஒரு மகளின் அப்பாவும் அம்மாவும் தானே.

கூகுள் எர்த்தின் வரைபடங்களை வைத்து,கராச்சியிலிருந்து மும்பைக்கு வெறும் படகில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்திறங்கினர்.சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் எல்லோர் முன்பாகவும் தனது எந்திரத் துப்பாக்கிகளை ஒருங்கிணைத்து,மும்பையின் சகல பகுதிகளையும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர்.வீரமுள்ள,பொறுப்புள்ள மகாராஷ்டிர காவல்துறை,கடலோரக் காவல்படை,ராணுவம்,அதிரடிப்படை என எல்லோரும் சேர்ந்து பாகிஸ்தான் பொறுக்கிகளை சுட்டுத் தள்ளினர்.இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு பாகிஸ்தான் காரன் சிக்கினான்.இன்று இவன் ஒருவனே போதும்.பாகிஸ்தான் இந்தியாவின் மீது தீவிரவாதப்போரை நடத்துகிறது என்பதை நிரூபிப்பதற்கு! இந்திய அரசு இன்னும் தூங்கிக்கொண்டே இருக்கிறது.உலக வல்லரசு அமெரிக்கா இந்த சம்பவத்தால், தனக்கு என்ன ஆதாயம்? என்று மட்டும் கணக்குப்போட்டுக்கொண்டிருக்கிறது.

நம்மை 300 ஆண்டுகளாகச் சுரண்டிய பிரிட்டன் நாட்டினர், இலங்கையில் இருக்கும் தனது கரும்புத் தோட்டங்களில் வேலைபார்ப்பதற்கு தமிழ்நாட்டிலிருந்து ஏராளமானவர்களை அழைத்து சென்றனர்.அந்த தமிழ்ப்பணியாளர்கள்,இன்று இலங்கையை சொர்க்கபுரியாக மாற்றிவிட்டனர்.ஆனால்,ராஜபக்ஷே போன்ற அரக்கர் கூட்டம் தனது சிங்கள வேட்டைநாய்களால், தமிழ் இனப்பெண்களை,தமிழ்க் கர்ப்பிணிகளை கற்பழித்துக்கொன்றுகொண்டே இருக்கின்றனர்.கருணாநிதி என்ன செய்கிறார் என்று தெரியவில்லை;சோனியாவுக்கு இதன் வலி தெரியுமா? இலங்கையில் துடிதுடிக்கச் சாவது என்ன சோனியாவின் இத்தாலி சொந்தங்களா?தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்தியாவிற்கு மட்டும் விசுவாசமாக இல்லாமல், எல்லா இந்தியப் பிரதமர்களையும் குழப்பிக்கொண்டு,இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் பார்த்துக்கொண்டான்.இந்தியா தனது சொந்த ரத்தங்களைப்பற்றி சிறிதும் அக்கறையின்றி, அதே நடுநிலைக்கொள்கையில் தொங்கிக்கொண்டே இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் 2,00,000 இந்திய மாணவர்கள் படிக்கச் சென்றுள்ளனர்.அவர்களை தினமும் ஆஸ்திரேலியர்கள் கொன்றுகொண்டே இருக்கின்றனர்.இதற்கு மட்டும் இந்தியாவின் முதன்மை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஆஸ்திரேலியாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.ஆஸ்திரேலியாவும் ஆடிப்போனது.ஆஸ்திரேலிய அரசும் தனது தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.எனக்கு ரொம்பப்பெருமையாக இருந்தது.என்னடா இது நம்மநாடு இப்படி ரோஷப்பட்டது கிடையாதே?! என்ன காரணமாக இருக்கும்னு விசாரிச்சுப்பார்த்தால் 2,00,000 இந்திய மாணவர்களில் 1,75,000 மாணவர்கள் வட இந்திய மாணவர்களாம்.அதனால் தான் இந்த ரோஷம்! அட!
இதே ரோஷத்தை இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில், காஷ்மீர் பிரச்னையில், மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் பிரச்னையில்,சீனாவின் ஆக்கிரமிப்புப்பிரச்னையில் ஏன் காட்டவில்லை?!

இன்று,உலக அரங்கில் அமெரிக்காவின் அரசியல் பிடிமானம் நழுவிக்கொண்டே இருக்கிறது.அந்த இடத்தை சீனா படுவேகமாகப் பிடித்துக்கொள்ளத் துவங்கியுள்ளது.இந்தியாவை ஒழித்துக்கட்டிட முத்துமாலைத் திட்டம் என்ற பெயரில் பாகிஸ்தான்,இலங்கை,மியான்மார்,பங்களாதேஷ்,நேபாளம்,திபத் போன்ற நமது அனைத்து நட்பு நாடுகளையும் வளைத்துப்போட்டுவிட்டது.நாம் இந்த நட்பு நாடுகளையும் அரவணைத்துச் செல்ல வில்லை;நமது வம்சாவழி இந்தியர்களையும் பாதுகாக்கவில்லை;ஆனால்,ஒரே ஒரு போர் வந்தால் சீனாவின் பொருளாதாரம் சீர்படுத்த முடியாத அளவிற்கு நொறுங்கிவிடும் என்பது சீனாவிற்கே தெரியும்.

நமது பிரச்னைகளான காஷ்மீர் பிரச்னை,தெலுங்கானாப்பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை,காவிரிப்பிரச்னை,சீனாவின் ஆக்கிரமிப்பு, திபத் பிரச்னையில் நமது நிலைப்பாடு, நேபாள அரசியல் மாற்றத்தில் நமது நிலைப்பாடு என எந்த பிரச்னைக்கும் இந்தியாவாகிய நாம் அமெரிக்கா உள்பட எந்த நாட்டின் தயவையும் நாட வேண்டிய அவசியமில்லை;நாமே உடனே தெளிவான ஆனால் சற்றே சர்வாதிகாரமான முடிவுகள் எடுத்தே ஆக வேண்டும்.வலிமையுள்ளவனுக்கே இங்கே வாழ்க்கை என்பதை இந்தியாவின் மத்திய துறைச் செயலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நமக்கு நடுநிலை தேவையே இல்லை;அது இந்துதர்மத்தின் கொள்கையுமல்ல;
பகவத் கீதையின் சாரமே இதுதான்:
எதிர்ப்பது உனது உடன்பிறந்தவனாக இருந்தாலும்,போர்க்களம் என வந்த பிறகு அவனை கொன்றுவிடு;இதனால்,உனக்கு அரசுரிமை கிடைக்கும்.ஒருவேளை நீ இறந்தால், உனக்கு சொர்க்கம் நிச்சயம்.
இந்தியா வல்லரசானால்,அமெரிக்கா போன்ற போதையுள்ள குரங்கின் அட்டகாசம் ஒடுக்கப்படும்.உலகில் போரே இராது.சீனா போன்ற வெறிபிடித்த வல்லாதிக்கம் சிதைந்துவிடும்.
ஒரு வேளை இந்தியா அழிந்தால்,இந்த உலகமே நிம்மதியாக இராது.விரைவில் இந்த உலகமே அழியும்.

1 comment:

  1. நன்பரே உங்கள் தேச பத்திக்கு தலை வணங்குகிறேன். இந்தியா தலைநிமிர உடனே ஒரு மாவீரன் தேவை.

    ஜெய்ஹிந்.

    ReplyDelete