Saturday, February 9, 2013

சொந்த செலவில் சூனியம்?




வியர்வை சுரப்பிகள் வெளியிடும் திரவம் பாக்டீரியாக்களுடன் சேர்ந்து உடல் வாடையைத் தருகிறது என நமக்குத் தெரியும்.ஆனால், ABC11 எனும் ஜீன் நமது உடலில் இருந்தால் நமது உடலில் இருந்து வாடையே வருவதில்லை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


அது மட்டுமல்ல, மனிதர்களில் பெரும்பான்மையோருக்கு உடல் வாடை ஏற்படுவதேயில்லை எனவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.இருப்பினும் உடல் வாடை இல்லாத 75% பேர் பாடி ஸ்ப்ரே(நாத்தமருந்து??!!) உபயோகிப்பதாகவும் உடல் வாடை இருக்கும் நபர்களில் பலர் பாடி ஸ்ப்ரே உபயோகிப்பதில்லை எனவும் அவர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.சமூக கலாச்சாரம் என்ற பெயரில் ஆட்டு மந்தைகளாக மக்கள் செயல்படுவதையே இது காட்டுகிறது.


இது இப்படியிருக்க, நமது உடலில் இருந்து வெளிவரும் உடல்வாடை மாற்று பாலினத்தவரை(ஆண் எனில் பெண்ணையும்,பெண் எனில் ஆணையும்) கவர்கிறது எனக் கண்டறிந்து அதன் மூலக்கூறுகளை அடிப்படையாகக்  கொண்டு பாடி ஸ்ப்ரே கம்பெனிகள் தங்கள் பொருட்களை தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன. அது மட்டுமல்லாமல்,பாடி ஸ்ப்ரேவினை உடலில் நேரடியாக அடித்துக் கொள்ளும்போது தோல் கறுத்துப் போய்விடுகிறது;பலருக்கு தீர்க்கமுடியாத நரம்புத்தளர்ச்சியை( ஸ்கின் அலர்ஜியால்) உருவாக்கிவிடுகிறது என்பது அனுபவ உண்மை.வியாபார தந்திரங்களில் ஒன்றாக இந்த  உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

ஆக,மாற்று பாலினத்தவரை கவர பயன்படுத்த வேண்டி உடல்(துர்)நாற்றத்தினை மறைக்க பணம் செலவு செய்து, தோலை கறுக்கிக் கொள்ளும் வழக்கத்தினையும்,உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்வதை என்னவென்று சொல்வது?


இதைத் தான் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பதா?
2009 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வுக்கட்டுரையை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருந்தோம்.ஒரு இளம்பெண்ணுக்கு எந்த இளைஞனைப் பார்த்ததும் காதல் வருகிறது தெரியுமா?


அந்த இளம்பெண்ணின் அப்பாவின் உடலில் இருந்து வெளிவரும் உடல் வாடை,எந்த இளைஞனின் உடலில் இருந்து வெளிவருகிறதோ அவன் மீதே காதல் உணர்வு வருகிறது.இதே நிலைதான் இளைஞனுக்கும்.அதாவது,தனது தாயின் உடல் வாடை எந்த இளம்பெண்ணின் உடலில் இருந்து வெளிப்படுகிறதோ அவள் மீதே காதல் உண்டாகிறது.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 28,பிப்ரவரி 2013

No comments:

Post a Comment