Saturday, February 9, 2013

"கொல்லும் சினத்தைக் கொள்ளாதே"



சோழப் படைத்தளபதி   ஒருவன் கடல்கடந்த போர்களில் பெருஞ் சாதனைகள் புரிந்து வெற்றியோடு திரும்பிய பின்  தன் உள்ளத்தை உறங்கவிடாமல் செய்த கேள்வி ஒன்றைச் சித்தர் ஒருவரை அணுகிக்கேட்டான்: ''சொர்க்கம்நரகம் இவையெல்லாம் உண்மையா?'' 
''உன் முகத்தைப் பார்த்தால் ஆண்டியைப்போல இருக்கிறது. உன்னைப்போன்ற ஆட்களுக்கெல்லாம் விளக்கமளித்து,  என் நேரத்தை வீணடிக்க மாட்டேன். விலகிப்போ'' என்று சினத்துடனும்அலட்சியத்துடனும் சித்தர் கூறினார். ஊரெல்லாம் புகழும் தன்னை ஒரே நொடியில்சித்தர் அவமானப்படுத்தியதைப் பொறுக்காத அத்தளபதி  கடும் சீற்றத்துடன் சித்தரை வெட்ட வாளை உருவினான். .  
''இதற்குப் பெயர் தான் நரகம்'' என்று அமைதியாகபுன்முறுவலுடன் பதிலளித்தார் சித்தர். உடனே தளபதி கோபம் தணிந்து அவர் காலில் விழ்ந்து, ''என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்'' என்றான். '' இதற்குப் பெயர் தான் சொர்க்கம்'' என்றார் சித்தர். சொர்க்கமும் நரகமும் நாம்  இந்த உலகில் நமக்குள் உருவாக்குவதே என்பதைப் புரிந்து கொண்டு ஞானியானான் அந்தத் தளபதி. 
கோபத்தில் கொதிப்பவர்கள் தங்களுக்குள் நரகத்தை உருவாக்குவதுடன் மற்றவர்களையும் நரகத்தில் தள்ளுகிறார்கள் என்பதே உண்மை. கோபம் கொள்வது மனித இயல்புதான். உங்களை ஒருவர் புண்படுத்தினாலோதவறு நிகழ்ந்தாலோ கோபம் எழுவது இயற்கையே. ஆனால் சினத்தீ வரம்பு கடந்து உங்களையோ,மற்றவர்களையோ பாதிக்கும்போதுதான் அது பிரச்சினையாகிறது. உங்களுக்குள் இருக்கும் கோப மிருகத்தின் சங்கிலியை நீங்கள்   அவிழ்த்துவிட்டால்அது உங்களையும் அழித்துஉங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களையும் சுட்டழிக்கும் என்று திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.  
ஆனால்சமூக அநீதிகள்அவலங்கள்சிறுமைகள் இவற்றைக்கண்டு பொங்கி எழும் கோபமோ ஆக்கப்பூர்வமானது. நன்மை பயக்கக்கூடியது. இதனையே பாரதியார் தம் புதிய ஆத்திசூடியில் 'ரௌத்திரம் பழகுஎன்று  ஆதரிக்கிறார். அதே பாரதியார் தனி மனித கோபத்தை விட்டொழிக்கச் சொல்கிறார். 'சினத்தை முன்னே வென்றிடுவீர்,மேதினியில் மரணமில்லைஎன்று கோபத்தை விட்டொழித்தவனுக்கு மரணமேயில்லையென்கிறார். 
தான் என்ற அகந்தைபாதுகாப்பின்மைஏமாற்றம்மன்னிக்கமுடியாமைஅவமானம்,மனப்புண்தர்மசங்கடம் முதலியவற்றிற்குக் கேடயமாகவே தனிமனித கோபம் ஏற்படுகிறது. ''நான் மிகவும் கோபக்காரன்'' என்று சிலர் பெருமைப்படுவது ''நான் மிகவும் பலவீனமானவன்'' என்று முரசறைவதாகும். கோபத்தை அடக்குவதுஅல்லது வெளியிடுவது இவற்றில் எது சரிஇரண்டும் சரியல்ல என்கின்றனர் உளவியலார். அடக்குவது மனஅழுத்தத்தை விளைவிக்கலாம். வெளியிடுவது கோபத்தை இன்னும் மிகுவித்து மேலும் தீமை விளைவிக்கும். சினத்தைக் கட்டுப்படுத்திமடைமாற்றம் செய்வதே தீர்வாகும். 
நம்மைக் கோபப்படவைக்கின்ற செயல்களே நம்மைச் சிரிக்கவும் வைக்கின்றன. மனிதத்தவறுகளே நகைச்சுவையாகின்றன. எனவே கோபத்தை ஆற்ற சிறந்த மடைமாற்று நகைச்சுவையே. உங்கள் பலவீனங்களைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். புண்படுத்தாமல்எரிச்சலூட்டாமல் நீங்கள் நினைப்பதைச் சாதிக்கக் கோபத்தை விட நகைச்சுவையே கைகொடுக்கும். 
கோபம் ஏற்படும்போதுஐம்புலன்களும் பாதிக்கப்படுகின்றன. சுரப்பிகள் தாறுமாறாகச் சுரக்கின்றன. எதிர்மறை எண்ணங்கள் மனத்தை ஆட்கொள்கின்றன. இதனால் இதய நோய்இரத்த அழுத்தம்நீரிழிவுகொலஸ்டிரால் அளவு மிகுதல்,நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல்மறதிமன ஆற்றல் உறிஞ்சப்படல்,சிந்தனைத்திறன் மந்தமாதல்கவனக்குறைவு மனச்சோர்வு முதலியவற்றைக் கரம் கூப்பி வரவேற்கிறது கோபம். 
இதற்கு நேர்மாறாகநகைச்சுவை சிறந்த விருந்தும்மருந்துமாகிறது. சிரிப்பு,உயிர்வளியை மிகுதியாக உள்வாங்கிதேவையான சுரப்பிகளைச் சுரக்கவைத்து உடலைத் தளர்த்துகிறது. தசைகளுக்குப் பயிற்சியளித்துப் பலப்படுத்துகிறது. எந்த வலியையும் குறைக்கிறது. இரத்த அழுத்தம் குறைத்துஇதய இரத்த நாளங்களை விரிவாக்கிஇதயநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது. சிவப்பணுக்களை மிகுதியாக்கிமூச்சுத்தொடர்பான நோய்களை விரட்டுகிறது. இடவல மூளை ஆற்றலைச் சமப்படுத்துகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை பெருக்குகிறது.  நம் நேர்மறை சிந்தனையை மிகுவிக்கிறது. இதனால் கோபம் வருவதைக்  கட்டுப்படுத்தவும்வந்தால்  சாமாளிக்கவும் முடியும். நாள்தோறும் சில நிமிடங்கள் சிரிப்பதைக் கட்டாயமாக்கிக்கொண்டால் இந்தப் பலன்களை மட்டுமல்ல மேலும் பலவற்றையும் பெறலாம். 
இச்சமயத்தில் ஔவை சொன்ன ஆத்துச்சூடிதான் நினைவுக்கு வருகிறது.... "ஆறுவது சினம்., ஆற்றுவது நகை"              
கோபம் x நகைச்சுவை  ஒப்பீட்டை மனதில் பதித்தவர்கள்,  கோபத்தைக் கைவிட்டு நகைச்சுவையுணர்வை நிச்சயம் வளர்த்துகொள்வார்கள். அப்படியும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்குச் சில யோசனைகள்: 
1.உங்கள் கோபத்தைத் தூண்டும் நிகழ்வுகள்இடங்கள்மனிதர்கள் முதலியவற்றைத் தவிருங்கள். சூழலைத் தவிர்க்கமுடியாவிட்டால்கோபத்தை வெளிப்படுத்தும் முன் சற்றே சிந்தியுங்கள். இந்தக் கோபத்தால் எனக்கு என்ன பாதிப்பு நேரும்இந்தச் சூழலில் நான் நினைப்பது சரியாகோபப்படுவதற்குப் பதில் வேறு ஏதேனும் செய்யலாமா? 
2. கோபம் வந்தபின்னர் மனம் வருந்திஇனி கோபமே வராமல் அடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களாகோபமே வராமல் இருப்பது சாத்தியமில்லை. வந்தால் எப்படிக் கட்டுப்படுத்துவதுஆக்கப்பூர்வமாகக் கையாள்வதுவெளியேற்றுவது என்பதில் தான் கோப நிர்வாகம் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதற்கான வழிகளைச்  சிந்தியுங்கள். 
3.'வெல்வது வேண்டின் வெகுளி விடல்',என்று  நான்மணிக்கடிகை கூறுவதையும், 'பொறுத்தார் பூமியாள்வார்என்ற பழமொழியையும், 'அடக்கப்பட்ட வெப்பம் சக்தியாக மாறுவதுபோலஅடக்கப்பட்ட சினம் ஆற்றலாக மாறுகிறதுஎன்று விவேகானந்தர் கூறுவதையும்திருக்குறளின் வெகுளாமை அதிகாரம் முழுவதையும் அடிக்கடி அசைபோடுங்கள். 
4.சாந்தி ஆசனம்ஆழ்ந்த பெருமூச்சு விடுதல்அமைதிப்படுத்தும் இசை,நடைப்பயிற்சிபிடித்தமான உடற்பயிற்சி , 10வரை எண்ணுதல்ஓவியம் தீட்டல் - இவை கோபத்தைக் கட்டுப்படுத்தும். கோபமூட்டியவரை மன்னித்து,கோபச்சூழலுக்குக் காரணமான படிப்பினையைப் பெற முயல்வது சிறந்த வழியாகும். 
5.எரிச்சலும்கோபமும்  ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்திஅமைதியை அளிக்கும் ஆற்றல் இனிப்பான,  பழச்சாறுகளுக்கும்பானங்களுக்கும் உண்டு என்கிறார் தி சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் டென்னிசன். செம்பருத்திக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதி தரும் ஆற்றல் உண்டு

No comments:

Post a Comment