Friday, June 3, 2011

சகல விதமான பாவங்களையும் நீக்கும் ஓம்சிவசிவஓம்





ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,இரண்டு தடவை ஓம்சிவசிவஓம் நமது வீட்டில் அல்லது தங்குமிடத்தில் தினமும் ஜபித்துவருவோம்;அப்படி ஓராண்டு வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது பிறந்த ஜாதகப்படி நமக்கு இருக்கும் சகலவிதமான தோஷங்களும் விட்டு நம்மை நீங்குவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும்.

இந்த தோஷங்கள் நாம் நமது முந்தைய பிறவி அல்லது/மற்றும் ஏழு பிறவிகளில் செய்த பாவச்செயல்களின் விளைவாக உருவானவை.எத்தனை தோஷங்களாக இருந்தாலும் சரி! எத்தனை பாவங்களாக இருந்தாலும் சரி!இந்த கலியுகத்தில் இறைநாம ஜபமே நம்மை நிம்மதியாக இப்பிறவியில் வாழ வைக்கும்;மறுபிறவியில் எந்தக் குறையுமின்றியும் வாழும் விதமாக பிறக்க வைக்கும் என்பது நிச்சயம்.



இந்த ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துவதற்கானக் காரணங்கள் என்ன?



ஆதிகாலத்தில் உலகம் முழுவதும் சிவ வழிபாடே இருந்தது.பிற்காலத்தில் தான் விஷ்ணு வழிபாடு வந்தது.(விஷ்ணு வழிபாடு செய்பவர்கள் மன்னிப்பார்களாக.)

விஷ்ணு வழிபாடு துவங்கும் வரையிலும் பிராமணர்களும் சிவ வழிபாட்டையே தொடர்ந்திருக்கிறார்கள் என மிகவும் புராதனமான நூல்கள் தெரிவிக்கின்றன.இதற்கான ஆதாரங்கள் மலையாள ஜோதிட ஆன்மீக நூல்களில் இருக்கின்றன.(நான் சிவ விஷ்ணு வழிபாட்டினை பிரித்துப் பார்க்க வில்லை)எதிர்காலத்தில் வேறு ஏதாவது வழிபாடுகள் கூட தோன்றலாம்.



எனவே, உலகில் மிக மூத்த மற்றும் பழமையான வழிபாடு சிவ வழிபாடே ஆகும்.நம்மை ஆள்வது நமது பாவ புண்ணியங்களுக்கேற்ப நவக்கிரகங்கள் ஆகும்;

நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள் ஆகும்;

பஞ்சபூதங்களை ஆள்வது மும்மூர்த்திகளான பிரம்மா+கலைவாணி; திருமால்+மகாலட்சுமி; சிவன்+சக்தி ஆவர்.

இந்த மும்மூர்த்திகளை நிர்வாகிப்பது ஆதிசிவன் ஆவார்.ஆதிசிவனின் மேலதிகாரி சதாசிவன் ஆவார்; சதா சிவனுக்கும் மேலே இருக்கும் சர்வ சக்தி மனோன்மணி எனப்படும் ஆதிபரப்பிரம்ம சக்தி ஆவாள்.



இவளே இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் பொறுப்பு ஆவாள்.அவள் யார்? அவளது மேலதிகாரி யார்? என்பது தெரியவில்லை.



எனவே, சிவனை தொடர்ந்து வழிபட,வழிபட நாம் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபட முடியும்.இந்த ரகசியம் விஷ்ணு பக்தர்களுக்கும் தெரியும்.



எனவே, நாம் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;முக்தி என்னும் பிறப்பற்ற நிலையை அடைவோம்:



(கற்பனை செய்து பாருங்கள்:- இந்தப் பிரபஞ்சத்தில் நமது இருப்பிடம்,தெரு,ஊர்,மாவட்டம்,மாநிலம்,நாடு,கண்டம்,உலகம்

சூரியக்குடும்பம்,மில்கிவே எனப்படும் நமது கேலக்ஸி என விரிந்து கொண்டே சென்றால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது தோன்றும்.

மில்கிவேயின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செல்ல ஒரு லட்சம் ஒளியாண்டுகள் ஆகும் என இயற்பியல் தெரிவிக்கிறது.அதாவது,விநாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்கள் தூரத்தில் புறப்பட்டால்,மில்கிவேயை ஒரு முறை கடக்க 1,00,000 ஆண்டுகள் ஆகும்.மில்கிவேயே இவ்வளவு பிரம்மாண்டம் எனில்,பிரபஞ்சம் எவ்வ்வ்வ்வ்ளவு பெரிது.இதில் இந்த இணையம் என்னும் வலைப்பின்னலில் ஒரே ஒரு ஓம்சிவசிவஓம் என்னும் வலைப்பூவை ஒரே ஒரு வீரமுனி நடத்திட, அதை எதேச்சையாக நீங்களும் வந்து வாசிக்க,வாசித்தப்பின்னர் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொருவிதமான தாக்கம்,சிந்தனை தோன்ற?

ஓம்சிவசிவஒம் மந்திரத்தை ஒரு ட்ரையல் செய்து பாருங்களேன்)

3 comments:

  1. சர்வ சக்தி மனோன்மணிக்கு மேலுள்ள சக்தி பரப்ரம்மம் ஆகும்

    ReplyDelete
  2. உங்கள் சேவைக்கு நன்றி.

    இறையருள் துனண புரிவதாக.

    வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  3. வாழ்துக்கள்

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete