Wednesday, June 8, 2011

தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய ஓம்சிவசிவஓம்




ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகின்றனர்.தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரில் அவர்கள் வசித்துவருகின்றனர்.சிறு சிறு அதிசயங்கள் நிகழ்ந்ததன்மூலமாக அவர்களுக்கு ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் குலதெய்வத்திற்குச் சமமாகிவிட்டது.



இந்நிலையில் அவர்களின் குடும்ப உறவினர் ஒருவர் கடன் தொல்லை தாளாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.விளைவு?கடைசி நொடியில் அவரது தற்கொலைமுயற்சி கண்டறிந்து,தடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதைக் கேள்விப்பட்ட இந்த ஓம்சிவசிவஓம் தம்பதியினர் தற்கொலைக்கு முயன்றவரை மருத்துவமனையில் சென்று சந்தித்தனர்.



மருத்துவர்கள் இந்த தம்பதியை மட்டுமல்ல;யாரையுமே அறைக்குள் அனுமதிக்கவில்லை;

எல்லோரும் வெளியே நில்லுங்க;இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என நர்ஸ்கள் கத்தினர்.





நெருக்கடியான நேரத்தில் ஓம்சிவசிவஓம் மந்திரம் உடனடியாக உதவும் என்ற வரி அந்த ஓம்சிவசிவஓம் தம்பதிக்கு நினைவுக்கு வந்தது.



உடனே விரிப்பு,ருத்ராட்சம் எதுவும் இல்லாமலேயே அந்த நெருக்கடியான சூழ்நிலையில் தனது உறவினர் உயிர் பிழைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்தனர்.சுமார் நான்கரை மணிநேரம் கடந்தது.



அவசர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெளிவந்த மருத்துவர்கள்,

“ எல்லாம் கடவுள் அதிசயமே! பிழைச்சிட்டார் போய்ப் பாருங்க” என்று இந்த தம்பதியிடம் வந்து சொன்னார்கள்.



இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.உரிய தம்பதியரின் அனுமதியோடு இந்த சம்பவம் வெளியிடப்படுகிறது.ஓம்சிவசிவஓம் உயிரைக் காக்கும்!!!

No comments:

Post a Comment