Tuesday, March 22, 2011

விரைவான பலன் தரும் ஓம்சிவசிவஓம்






எனது நண்பர் தனது வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையைத் தெரிவித்தார்.நீங்களும் முயன்று பார்க்கலாம்.

அவரது தோட்டம் ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது.நமது வலைப்பூவைப் பார்த்து அதுபற்றி தனது ஆன்மீக குருவிடம் ஆலோசித்திருக்கிறார்.அவரது வழிகாட்டுதலின் படி,ஒரு செவ்வகமான கருங்கல்லை பலகை வடிவில் இருப்பதை வீட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.அதை மணை போல்,கொத்தி சமதளமாக்கியிருக்கிறார்.

இந்த கருங்கல் மணையை வீட்டு பூஜையறையில் வைத்து,மண் விளக்கு(கிளிஞ்சட்டி)ஒன்பது வாங்கி,அதில் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய்யை வாங்குவதில்லை)யினை நிரப்பி,அதில் ஒரு சில சொட்டுக்கள் தேங்காய் எண்ணெயை கலந்து,தாமரைநூல் திரியிட்டு,தரமான பத்தியை எரிய விடுவார்.அப்படிச் செய்த கையோடு,அவர்,அவரது மனைவி,அவரது இரண்டு மகள்கள்(மூத்தவளின் வயது 11,இளையவளுக்கு 9) உடன் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறார்.

அது சரி? 21 வயதுக்கு மேற்பட்டவர்தானே ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?எப்படி சிறுமிகளை வைத்து அவர் ஜபிக்கிறார்?

தனது மகள்களுக்கு ஓம்,ஓம்,ஓம் என்று மட்டும் ஜபிக்கும்படி பயிற்சியளித்திருக்கிறார்.

41 நாளிலிருந்து அவருக்கு ஓம்சிவசிவஓம் பலனளிக்கத்துவங்கியிருக்கிறது.ஆம்! சுமார் 18 மாதங்களாக அவருக்கு வராத பணம்(கொடுத்த கடன்) வட்டியோடு திரும்பியிருக்கிறது.அவரால் இதை நம்பவே முடியவில்லை;

அவரது முன்கோபம் பெருமளவு குறைந்திருக்கிறது;வீட்டிற்கு வந்ததும் ஆழ்ந்த மனநிம்மதியை உணர்ந்து வருகிறார்.இப்போது ஓம்சிவசிவஓம் பற்றி நோட்டீஸ் அச்சடித்து,அவரது ஊரிலிருக்கும் பழமையான சிவாலயத்தில் பிரதோஷம் தோறும் விநியோகம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை நமக்கு அறிமுகப்படுத்திய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கூகுள் (1க்குப்பின்னாடி 100 சைபர்கள்)நன்றிகள்!!!



எந்த ஒரு மந்திரத்தையும்,கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து,இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வைத்துக்கொண்டு,இடுப்பில் சுத்தமான மஞ்சள் பட்டு ஆடை அணிந்து,அதிகாலை மணி 4.30 முதல் 6.00 மணி வரையிலும்,கருங்கல்லில் அமர்ந்து ஒரு முறை ஜபிக்க பத்தாயிரம்  மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பது அவரது ஆன்மீக குரு உபதேசித்திருக்கிறார்.

No comments:

Post a Comment