Showing posts with label கேமத்துவ தோஷம். Show all posts
Showing posts with label கேமத்துவ தோஷம். Show all posts

Sunday, March 6, 2011

கேமத்துவ தோஷம் என்றால் என்ன?





பெரும் செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்து,வாழ்க்கை என்றால் என்ன?எப்படி வாழ வேண்டும்? என்ற ஞானம் 22 வயது அல்லது 31 வயதுக்குள் ஏற்படும்.அப்படி உருவாகும் முன்பே,திடீரென சொத்துக்கள்,வசதிகள்,யோகங்கள் அனைத்தையும் இழந்துவிட்டால் அவர்களுக்கு கேமத்துவ தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.

இதனால்,இவர்களின் தினசரி வாழ்க்கை ஏழ்மையில் இருக்கும்.பலருக்கு வேலை,திருமணம்,காதல்,அரசுப்பணி,நல்ல தொழில் வாய்ப்பு போன்றவை கடைசி நிமிடத்தில் கைகூடாமல் போய்விடும்.ஒரு வேளை உணவுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.சோற்றுக்காக போராடுவதே வாழ்க்கையாகப் போய்விடும்.

இவர்களின் பிறந்த ஜாதகத்தில் குருவை சனியோ,சனியை குருவோ பார்க்கும் விதமாக கிரகநிலை அமைந்திருக்கும்.சிலருக்கு குருவும் சனியும் ஒரே ராசியில் இருக்கும்.தற்போது 2008,2009,2010,2011 ஆம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிரக நிலை அமைந்துகொண்டே இருக்கிறது.இந்த நான்கு ஆண்டுகளிலும் சனியை குருவும் குருவை சனியும் நேர் ஏழாம் பார்வையாகப் பார்த்துவருகின்றனர்.

இவர்கள் முற்பிறவியில் ரகசியா,டிஸ்கோ சாந்தி,சிலுக்கு ஸ்மிதா,குத்துப்பாட்டு நடிகைகளின் வேலையைப் பார்த்திருப்பர்.

முற்பிறவியில் தனது அழகு,கவர்ச்சியால் ஏராளமானவர்களை ஏங்க வைத்தவர்களுக்கு இப்பிறவியில் கேமத்துவ தோஷம் இருக்கும்.

ஜாக்கிரதை:இப்பிறவியில் காம வெப்சைட்டுகள்,வலைப்பூக்கள்,மின் அஞ்சல் குழுக்கள் நடத்துபவர்களுக்கு இதே நிலைதான் அடுத்த பிறவியில் ஏற்படும்.

தவிர ஷகீலா போன்றவர்களுக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என நினைக்காதீர்கள்.உங்களின் சொந்த காம அனுபங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்;நீங்கள் கேள்விப்பட்ட காம கிசுகிசுக்களையும் மறந்துவிடுங்கள்;உங்கள் தெருவில் நடைபெற்ற காம அவமானங்களை தெருவையும் கடந்து யார் யாருக்கோ இறக்கை முளைத்து பறக்கும்;உங்கள் அலுவலகத்தில் நடக்கும் முறையற்ற காம கூத்துக்களும் இதே நிலைதான்.இதுமாதிரியான சம்பவங்களில் ஈடுபடுபவர்களைவிட இவர்களைப் பற்றி தமது கற்பனையையும் கலந்து உரியவர்களை அசிங்கப்படுத்துவதில் ஒரு பரமசுகம் என நம்பும் தமிழ் மக்கள் அதிகம்.இவர்கள் அனைவருக்கும் கேமத்துவ தோஷம் ஏற்படும்.

மிகவும் கடுமையான கேமத்துவ தோஷம் ஒருவருக்கு காமத்துணையை வாழ்நாள் முழுக்கக் கிடைக்காமல்,ஏங்கியே சாக வைக்கும்.

கடுமை குறைந்த கேமத்துவ தோஷம் சில ஆண்டுகளுக்காவது கணவன் மனைவி பிரிவினையை உருவாக்கும்.

மிகக் குறைந்த கேத்துவ தோஷம்,எந்த வித காமக் குற்றங்கள் செய்யாமலேயே ஒழுக்கமற்றவர் என்ற பெயரை உருவாக்கும்.நான் கேள்விப்பட்டவரையில்,தனது மகனையும்,மகளையுமே ஒழுக்கங்கெட்டவன்/ள் என எல்லோரிடமும் தூற்றும் அம்மா,அப்பாக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இப்படி தரங்கெட்ட அம்மா,அப்பா உருவாக பல காரணங்கள் உண்டு.அதில் ஒரு முக்கிய காரணம் டிவியில் வரும் பிரபல நெடுந்தொடர்கள் தான்.எப்படி எல்லாம் ஒருவரது பெயரைக் கெடுப்பது? என்பதை சொல்லித்தருகின்றன.