Monday, March 28, 2011

மாபெரும் துன்பங்களைப் போக்கும் நவபிருந்தாவன் வழிபாடு



நவபிருந்தாவனத்தின் படத்தையும்,ஒரு மட்டைத் தேங்காயையும் வைத்து நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.இந்த நவபிருந்தாவனத்தின் படத்தை 12 முறை வலம் வர வேண்டும்.நவபிருந்தாவனத்து நாயகர்களின் பெயர்களைக் கூறியோ அல்லது துதிகளையோ மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் இவ்வாறு ஆறு நாட்கள் வழிபட்டு,ஏழாம் நாளன்று ஸ்ரீஇராகவேந்திரர் சன்னதியிலோ அல்லது ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதியிலோ பொங்கல் நைவேத்தியம் செய்து,அந்த மட்டைத் தேங்காயை உரித்து,உடைத்து,பிரசாதமாக வழிபட்டவர் உட்கொள்ள வேண்டும்.

மாபெரும் பிரச்னைகள்,துன்பங்கள் தீர இது ஒரு சுலபமான பரிகார பூஜை ஆகும்.இந்த வழிகாட்டுதலை ஸ்ரீஇராகவேந்திரர் பிருந்தாவனத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் நமக்கு அருளியுள்ளார்.நன்றி:குமுதம் ஜோதிடம் பக்கம் 19,28.5.2004

1 comment:

  1. மிக்க நன்றி நவபிருந்தாவன படமும் கொடுத்து இருந்த மிகவும் பயன் உள்ளதாக இருந்து இருக்கும்...படம் இருந்த தயவு செய்து சேர்க்கவும்..நன்றி... சாமி

    ReplyDelete