Thursday, August 6, 2009

கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்யும் விதம்

கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்யும் விதம்


புரட்சி, சோசியலிசம், சம தர்மம் என்ற வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.ஆமாம் இருந்தவர்கள் தான்.இருப்பவர்கள் அல்ல.

புரட்டு, சந்தர்ப்பவாதம், பண தர்மம் என மாறி விட்ட கம்யூனிஸ்டுகளால் இந்தியா குட்டிச்சுவராகப் போனது.இன்று அவர்களே குட்டிச்சுவராகிவிட்டனர்.

பஞ்சாப் மாவீரன் சுதந்திரப்போராட்ட தியாகி பகத்சிங்கை சுதந்திரப்போராட்டகாலத்தில் தேசத்துரோகி என அறிவித்தவர்கள் இந்த கம்யூனிஸ்டுகள்.

நமது பாரதத்தை சீனா படையெடுத்த போது கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது.ஒன்று சீனாவுக்கு ஆதரவாக மேற்கு வங்காளத்தில் பணவசூல் செய்தது.அப்படி பணவசூலின் போதே இந்த ரசீதை சீன ராணுவத்திடம் காட்டினால் உங்களைக் கொல்ல மாட்டார்கள் என அறிவித்தனர்.இந்த ஒரு சம்பவமே போதுமே இவர்கள் சீனாவின் உளவுப்பிரிவு என நிரூபிப்பதற்கு!!!

ஈரானில் மதவாத அரசைக் கவிழ்க்க உதவினர் கம்யூனிஸ்டுகள். அப்படி கம்யூனிஸ்டுகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் , ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?
கம்யூனிஸ்டுகளை அடியோடு கொன்றதுதான்.(இதை எந்த கம்யூனிஸ்டும் பொய் என நிரூபிக்கட்டும்.நான் ஆன்மீகக்கடல் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்).

தமிழ்நாட்டில் எப்படி கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்கிறார்கள் தெரியுமா?

கம்யூனிஸ்டு என்றாலே அரசு அதிகாரிகள் நடுங்குவது இன்று வரை உண்மை.இந்த மரியாதையை 1980 வரையிலான கம்யூனிஸ்டுத்தலைவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு, தாலுகா அலுவலகம், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகம் சென்று அடுத்த 6 மாதங்களில் எந்தெந்தப்பகுதிகளுக்கு சாலை வசதி, குடிநீர் வசதிக்கு அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போகிறது? என்பதை அறிந்து கொள்வார்கள்.

அதைக் கொண்டே அந்தந்தப் பகுதிகளில் போராட்டம்,ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.இது அப்பகுதி மக்களுக்குத் தெரியாது இல்லையா? அடுத்த 6 மாதத்தில் ‘இவர்கள் போராடியது போல’ திட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிடும்.
உடனே வெற்றி வெற்றி என கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வை மதவாதக்கட்சி என கத்தித் தீர்ப்பார்கள்.ஆனால், கேரளாவில் முஸ்லீம் லீக்குடன் கூட்டணி வைத்து ஆளுவார்கள்.அது மதவாதம் கிடையாதாம்.
கேரளாவில் பா.ஜ.க.வின் பிரபலமான தலைவர்களைக் கொல்லுவார்கள்.அதுதான் இவர்களுக்கு சோசியலிசமாம்.

மதம் ஒரு அபின் என்பர்.ஆனால் இன்று சோவியத் ரஷ்யாவில் இந்து தர்மம் பரவிக்கொண்டிருப்பதை காதில் கூட வாங்கமாட்டார்கள்.

கோர்ப்பசேவ், முன்னாள் சோவியத் அதிபர் சொன்ன வார்த்தைகள்:நாங்கள் ஆன்மீக ரீதியான தேசிய ஒருங்கிணைப்பை உருவாக்காததால் தான் இன்று பிரிந்து போய்விட்டோம்.
நீங்கள் ஆன்மீக ரீதியான ஒருங்கிணைப்பால் விரைவில் இந்த பூமியையே ஆளுவீர்கள்.

இந்தியாவில் 1960 வாக்கில் இந்துமதத்தை சித்தாந்தரீதியாக அழிப்பதற்காக புது டெல்லியில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.இதை உருவாக்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான்.கூடவே ஒரு காரியம் செய்தனர்.உங்களிடம் இருக்கும் பழமையான ஓலைச்சுவடிகளை ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகத்துக்குத் தாருங்கள்.அவற்றைக்கொண்டு நமது பெருமைகளை பரப்புவோம் என மக்களிடம் கம்யூனிஸ்டுகள் வேண்டினர்.
பொது மக்கள் பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்த புராதன இந்திய படைப்புகளைத் தந்தனர்.
அவற்றை கம்யூனிஸ்டுகள் எரித்தனர்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்த கம்யூனிஸ்டுகள் கடைசி வரை மன்மோகன் சிங்கின் அரசுக்கு ஆதரவை வாபஸ் வாங்கவில்லை.ஏன்? பதவி சுகத்தை துறக்கத்தயாராக இல்லை.விளைவு?
85 எம்.பிக்களாக இருந்த கம்யூனிஸ்டுகள் 25 ஆக குறைந்து கரைந்து போனார்கள்.விரைவில் இந்திய மியூசியங்களில் கம்யூனிஸ்டு கொள்கைகளைக் காணலாம்.
குறிப்பு:எப்படி இந்த கட்டுரை ஒரு நேர்த்தியாக இல்லையோ அதேபோல கம்யூனிஸ்டுகளும் நேர்த்தியாக இல்லை.
இன்று இந்தியாவில் 12 விதமான கம்யூனிஸ்டுகட்சிகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.
இதில் மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் நக்சலைட் ஆகும்.

No comments:

Post a Comment