Tuesday, May 26, 2009

சுயச்சார்பு என்ற சுயபலம்(SELF-RELIANCE)


சுய கவுரவம் என்ற சுயச்சார்பு(SELF RELIANCE)

யாரையும் எப்போதும் எதற்காகவும் நம்பாமல் வாழும் வாழ்க்கைக்குப் பெயர்தான் சுயச்சார்பு என்று பெயர்.இப்படி வாழும் நாடு தற்காலத்தில் இஸ்ரேல் ஆகும்.
ஒரு தனிமனிதன் சுயச்சார்புடன் வாழ அவனுக்கு ஏராளமான சேமிப்பும்,ஒரு அல்லது இரு துறையில் வல்லவராகவும்,ஆழ்ந்த மத நம்பிக்கையும் இருக்க வேண்டும்.

கி.பி.1700 வரை முடிவடையும் 20,000 ஆண்டுகள் வரை நமது இந்து தேசமாகிய பாரதம் உலகின் ஒரே சுயச்சார்பு நாடாக இருந்தது.நம்மை போதுமான அளவிற்கு சுரண்டிவிட்டு நம்மைவிட்டுப்போனான் ஆங்கிலேயன்.அவன் நம்மை வெற்றுநாடாக மாற்றிவிட்டு இங்கிருந்து வெளியேறியது 15.8.1947 அன்று!!!
அப்போது நமது நாட்டில் 6 லட்சம் கிராமங்கள் இருந்தன.சுமார் 3,75,000 ஆரம்பப்பள்ளிகள் இருந்தன.இன்று 26.5.2009 நமது நாடு முழுவதும் 2,60,000 கிராமங்கள் உள்ளன.சுதந்திரம் வாங்கும் வரையிலும் நமது நாட்டின் 6,00,000 கிராமங்களும் சுயச்சார்பு கிராமமாக இருந்துவந்தது.ஒரே கிராமத்தில் ஒரு மனிதன் மற்றும் சமுதாயத்திற்குத் தேவையான அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்டன.
வெகு விரைவில் நமது பாரதம் மீண்டும் சுயச்சார்புள்ள நாடாக மாறப்போகிறது.மீண்டும் நாம் இந்த உலக நாடுகளுக்கே உணவளிக்கப்போகிறோம்.நமது இந்து தர்மம் உலகம் முழுவதும் உள்ள ஜாதி,மத,இன,மொழிப்பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப்போகிறது.அதற்கான ஆரம்பப்புள்ளி 18.11.2009 அன்று அல்லது அதற்கு முன் துவங்கப்போகிறது.
ஒரு சுயச்சார்பு சம்பவத்தை இப்போது பார்ப்போம்:
இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் 1920களில் மோவார் மகாராஜா வாழ்ந்துவந்தார்.அவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது.ரோல்ஸ் ராய்ஸ் அமெரிக்காவில் தயாரிப்பது தெரிந்து அமெரிக்காவிற்கே அதன் தொழிற்சாலைக்கே சென்றார் ரோல்ஸ் ராய்ஸ் வாங்குவதற்கு!!!
ரோல்ஸ் ராய்ஸ் நிர்வாகம் அவரிடம் நீங்கள் அடிமை தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்.உங்களுக்கு நாங்கள் எங்கள் காரை விற்க மாட்டோம் என அமெரிக்கர்கள்-
இன்று வரை ஜனநாயகம்,சமதர்மம்,மனித நேயம் பேசுபவர்கள்- நிறவெறியைக்காட்டிக்கொண்டனர்.
மகாராஜா சிறிதும் வருத்தப்படவில்லை.புன்னகைத்தவாறே அங்கிருந்து வெளியேறினார்.நமது நாட்டிற்குத் திரும்பினார்.

உலகம் முழுவதும் வாழும் தனது நண்பர்கள் மூலமாக நூறு ரோல்ஸ்ராய்ஸ் கார்களை -பழைய கார்களை வாங்கினார்.தனது அரண்மனையில் சேரும் குப்பைகளை அள்ளிப்போட அவற்றைப் பயன்படுத்தத்துவங்கினார்.இந்த விஷயம் இந்தியப்பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது.
அவற்றை ஐரோப்பிய பத்திரிகைகள் வெளியிட்டன.ஐரோப்பியப் பத்திரிகைச்செய்திகளை மேற்கோள் காட்டி அமெரிக்கப்பத்திரிகைகள் இவற்றை தலைப்புச்செய்திகளாக அமெரிக்காவில் வெளியிட்டன.ரோல்ஸ்ராய்ஸ் கார் நிர்வாகத்தின் மானம் உலகமயமானது.
மோவார் அரசாங்கத்தைத் தேடி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ரோல்ஸ்ராய்ஸ் நிர்வாணம் ஒ ஸாரி- நிர்வாகம் ஓடி வந்தது.நடந்த செயலுக்கு மன்னிப்புக்கேட்டது.100 பழைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் புதிய காரின் விலைக்கு திரும்ப எடுத்துக்கொண்டது.மகாராஜாவிற்கு புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்தது.

ஒரு போதும் உங்கள் சுய கவுரவத்தை விட்டுத்தராதீர்கள்.
இந்த பூமியை நிம்மதியாக வாழவைப்பதற்கு உருவானதே நமது சனாதன தர்மம்.
அழியாத பேரின்பத்தின் குழந்தைகளாகிய நாம் வடக்கே அலாஸ்கா முதல் தெற்கே நியூசிலாந்துவரை இந்து தர்மத்தைப்பரப்புவோம்.
இப்போதே நமது தமிழ்நாட்டிற்கு உலகம் முழுவதுமிருந்து தாமாகவே இந்து தர்மத்திற்கு மாறி இந்தியக்குடியுரிமை பெற்று இந்து தர்மப்படி ஏராளமான வெள்ளையர்கள் வாழத்துவங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment