Thursday, May 21, 2009

ஆழ்நிலைதியானம் கற்க சிறந்த இடம் சென்னை


ஆழ்நிலை தியானம் கற்க சிறந்த இடம் சென்னை

தியானம் தொடர்ந்து செய்துவந்தால் நமது மனதில் உள்ள தேவையில்லாத எண்ணங்கள் அழிந்துவிடும்.
உதாரணமாக தினமும் இண்டர்நெட் பார்த்தால் எதை அதிகமாகப் பார்ப்போம்? இதனால் மனமும் உடலும் கடுமையாக பாதிக்கப்படும்.
இதை சீர்செய்யவும், முற்பிறவி பாவங்களை முழுமையாக நீக்கவும் ஆழ்நிலை தியானம் செய்யுங்கள்.
கீழ்காணும் முகவரியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை சுமார் 5 மணியளவில் ஆழ்நிலைதியானம் பற்றி ஒரு அறிமுக உரை நிகழ்த்துகிறார்கள்.இந்த உரை சுமார் ஒன்றரை மணிநேரம் இருக்கும்.
இந்த உரை பிடித்திருந்தால் மறுநாள்(ஞாயிறு) காலை சுமார் 11 மணிக்கு ஆழ்நிலைதியானம் ஆரம்பம்.கட்டணம் ரூ.700/-மட்டுமே!
ஞாயிறு முதல் புதன் வரை நடைபெறும்.அதன் பிறகு, நாம் வீட்டில் தினமும் குறைந்தபட்சம் ஒருமுறை அதிகபட்சம் இருமுறை ஆழ்நிலைதியானம் செய்துவரவேண்டும்.
சுமார் 3 மாதங்களுக்குப்பிறகு நமது சிந்தனை, பேசும் விதம், நடத்தை அதாங்க கேரக்டர்,ஆளுமைத்திறன் அதாங்க பர்சனாலிட்டியில் மிகப்பெரும் மாற்றங்கள் தெரியும்.
5ஆண்டுகள் தொடர்ந்து நாம் ஆழ்நிலைதியானம் செய்துவந்தால் இவ்வுலக வாழ்க்கை சொர்க்கமாகிவிடும்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் மகரிஷி மகேஷ் தோட்டம் என்ற இடம் உள்ளது.தொலைபேசியில் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்:
044-26403960, 044-26411862



























No comments:

Post a Comment