Sunday, September 2, 2012

ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க ஏற்ற இடம்;ஜபிக்கும்போது நமது பார்வையில் இருக்க வேண்டிய படம்









கோதை பிறந்த ஊர்;கோவிந்தன் வாழும் ஊர்! நீதி நெறி நல்லார் வாழ்ந்து வழிகாட்டும் ஊர்!!! என்ற பெருமை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு;ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் மதுரையிலிருந்து குற்றாலம்/செங்கோட்டை செல்லும் துணை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது.



முதலாம் நூற்றாண்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஒரு நந்தவனத்தில் ஸ்ரீஆண்டாளை குழந்தையாக கண்டெடுத்தார்;அப்படி கண்டெடுத்த நேரமே ஆடி மாதம் வந்த பூரம் நட்சத்திர நாளாகும்.(சூரியனின் ராசியான சிம்மத்தில் சந்திரனும்,சந்திரனின் ராசியான கடகத்தில் சூரியனும் பரிவர்த்தனையாகி இருந்த நாள் அது)ஜோதிடப்படி கணித்துப் பார்த்ததில்,ஆறு கிரகங்கள் அம்ச சக்கரத்தில் உச்சமாக இருந்திருக்கின்றன.


மஹாலட்சுமியின் அம்சமாக ஸ்ரீஆண்டாள் விளங்கியிருக்கிறாள்;அதனாலேயே இன்று வரையிலும்(முதல் நூற்றாண்டிலிருந்து இருபத்தோராம் நூற்றாண்டு வரை) பால் வளத்துக்கு குறைவில்லாத ஊராக ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்து வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் பாலில் இருந்து தயாராகும் பால்கோவாவின் சுவை வேறு எந்த ஊர் பால்கோவாவிற்கும் வரவில்லை;இது ஸ்ரீஆண்டாளின் ஆசியே காரணம் ஆகும்.



எனது அனுபவத்தில் ஸ்ரீஆண்டாளின் ஜாதகத்தை ஒரு காகிதத்தில் ஒருமுறை எழுதினால்,அன்று ஏதாவது ஒருவழியில் நமக்கு பணம் கிடைக்கிறது;இதை பலமுறை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.செல்வத்தின் அதிபதியான ஸ்ரீமஹாவிஷ்ணுவையே தனது மணாளனாக ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியார் மானசீகமாக ஏற்று வாழ்ந்திருக்கிறாள்.


திருப்பாவை என்னும் 31 பாடல்களைக் கொண்ட நூலை இயற்றியது ஸ்ரீஆண்டாள்! இந்த பாடல்களில் “ஆழி மழைக்கண்ணா!” என்று துவங்கும் பாடலை நமது ஊரில் 41 நாட்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்து வந்தால்,மழை வந்துவிடும்;பலமுறை பல நகரங்களிலும்,பல கிராமங்களிலும் இதை பாடி உணர்ந்திருக்கின்றார்கள்;மார்கழிமாதத்தில் பாவை நோன்பு என்பதை நமக்கு அறிமுகப்படுத்தியது ஸ்ரீஆண்டாளே! இந்த பாவை நோன்பை மார்கழி மாதம் முழுவதும் இருக்கும் கன்னிப்பெண்களுக்கு சிறந்த கணவன் அமைவான்  என்பது பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.

நான் சென்னையில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது,எனது சொந்த ஊர் எது? என்று பலர் பலமுறை விசாரித்திருக்கின்றனர்;அப்படி விசாரிக்கையில்,ஒருவரிடம் ‘எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்று சொன்னதும்,அது எங்கே இருக்குது? உங்கள் ஊரில் சிறப்பு என்ன?’ என்று கேட்டார்;நான் கேஷீவலாக, “ஆண்டாள் பிறந்த ஊர் எங்க ஊர்” என்றேன்.சொன்ன மறு நொடியே ‘ஆண்டாள் பிறந்த ஊரிலிருந்தா வந்திருக்கீங்க!!!’ என்றவாறு பொது இடம் என்று கூட பார்க்காமல் எனது காலில் சடாரென அந்த பெரியவர் விழுந்துவிட்டார்.நான் அதிர்ச்சியும்,பெருமையும் அடைந்து திக்குமுக்காடிப்போனேன்.அதன் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை;இப்போது புரிகிறது.




அவளை குழந்தைப்பருவத்தில் கண்டெடுத்த இடத்தை நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு தருவதில் பெருமை கொள்கிறேன்.


இந்த படத்தை நோக்கியவாறு ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவந்தால்,விரைவான மந்திர ஸித்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு ஆகும்.


ஓம்ஹரிஹரிஓம்

3 comments:

  1. Plz provide Horoscope of Sri Aandaal

    ReplyDelete
  2. எனது அனுபவத்தில் ஸ்ரீஆண்டாளின் ஜாதகத்தை ஒரு காகிதத்தில் ஒருமுறை எழுதினால்,அன்று ஏதாவது ஒருவழியில் நமக்கு பணம் கிடைக்கிறது;இதை பலமுறை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.....

    Anna Pls post Sri Andal Amma Horoscope

    ReplyDelete
  3. Please publish the Horoscope of Sri Andal

    ReplyDelete