Thursday, September 27, 2012

தினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்=3



31.சினிமாக் காட்சிகளில் நடிகைகள் மற்றும் ஹீரோயின்கள் தொப்புளைக் காட்டுவதைப் போல காட்சிகளை நமது இயக்குநர்கள் வைக்கிறார்கள்.இதை கவனிக்கும் தமிழ் சகோதரிகள் அதே போல தமது தினசரி வாழ்க்கையை மாற்றிக்கொள்வதன் விளைவாக,மாறுபட்ட சிந்தனையுள்ள குழந்தைகள் பிறக்கின்றன;


நமது பூமிக்கு நேர்கீழே ஏழு உலகங்கள் இருக்கின்றன.அந்த உலகங்களுக்கு ராக்கெட்டில் செல்ல முடியாது;ராக்கெட்டானது நமது அறிவாற்றலால் உருவாக்கப்பட்டது ஆகும்.ஆனால்,அந்த உலகங்களை பார்க்கவோ,தொடர்பு கொள்ளவோ தினசரி தியானம் அல்லது மன சக்தியை அதிகரித்தல் மூலமாகவோ அல்லது ஏதாவது  ஒரு சக்திவாய்ந்த இறைவழிபாடு செய்வதன் மூலமாகவோ மட்டுமே முடியும்.

குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் தொப்புளை வேண்டுமென்றோ அல்லது தெரியாமலோ பொது இடங்களில் காட்டுவதன் மூலமாக முனி அல்லது வேறு உலகத்தைச் சேர்ந்த ஆத்மாக்கள் அந்த கர்ப்பிணியின் கருவுக்குள் அடைக்கலமாகிவிடுகின்றன.இதனால்,வேறு உலகத்தைச் சேர்ந்தவர்கள் மனிதர்களாக பிறந்துவிடுகிறார்கள்.இந்த பழக்கத்தால் தான் கடந்த சில நூற்றாண்டுகளாக இங்கே மனிதத்தன்மை நிறைந்தவர்கள் பிறப்பது மிகவும் குறைந்துகொண்டே வருகிறது.இதன் மூலமாக,பலருக்கு ஆன்மீக முன்னேற்றங்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

32.முன் ஜன்மம் தொடர்பான காதல் சினிமாக்கள் பெரும்பாலும் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கின்றன;ஏனெனில்,முன் ஜன்மம் நிஜம் என்பதை அதீத உளவியல் நிரூபித்துவிட்டது;இந்த கொள்கையின் அடிப்படையில் தான் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயாவின் ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன:இரண்டு பேர் தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தால்,அவர்கள் முன் ஜன்ம நண்பர்கள் ஆவர்;அதே போல தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக எதிரிகளாக இருந்தால் அவர்கள் முன் ஜன்ம எதிரிகள் ஆவர்;



33.செவ்வாயும் சுக்கிரனும் ஒருவரது பிறந்த ஜாதகத்தில் இருந்தாலே அது தொடர்பாக சுமார் இருபது ஜோதிடப்பலன்களைச் சொல்லலாம்;இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அவர்களுடைய முன் ஜன்மம் தொடர்பான வாழ்க்கை ரகசியத்தை தெரிவிக்கிறது.விடுபட்ட முன் ஜன்ம வாழ்க்கையின் சில பகுதிகள்/ஆட்கள்/தொழில்/குடும்ப உறவுகளை இந்த பிறவியிலும் தொடர வைக்கப்போகிறது என்று அர்த்தம்.இதற்கு மேல் விளக்கம் சொல்ல முயன்றால் அது சில நூறு பக்கங்களுக்கு விரிந்துவிடும்.



34.தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி,உலகமயமாக்கல், கலியுகம் துவங்கி 5000 ஆண்டுகள் கடந்து போய்விட்ட நிலை போன்றவைகளால் இன்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மனித உணர்வுகள் மழுங்கிக் கொண்டிருக்கின்றன;அன்பு,பாசம்,தனது வாழ்க்கைத்துணையை புரிந்து கொண்டப்பின்னர்,விட்டுக்கொடுக்காமல் இருத்தல்,தியாகம்,தேசபக்தி,தெய்வபக்தி போன்றவைகள் எங்கோ ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கின்றன;ஒரு லட்சம் பேர்கள் வாழ்ந்து வரும் ஒரு நகரத்தில் சுமார் நூறுபேர்களிடம் தெய்வபக்தி இருந்தாலே அதிகம்;மற்றவர்கள் தமது கடுமையான கர்மவினை தீராதா என்ற ஏக்கத்தில் வழிபாடுகளை செய்து வருகின்றனர்;இந்த  சூழ்நிலையில் பணம் உடனே கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடிய சமுதாயமாக நமது இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பக்தியையும்,ஆன்மீகச் சிந்தனைகளையும்,இறைவழிபாட்டையும் அந்த வழிபாட்டிற்கான காரணங்கள்,வரலாறு,காரண காரியம் போன்றவைகளை விளக்கி வழிகாட்ட வேண்டியிருக்கிறது.



35.பணம்,அதிகாரம்,காமம் போன்றவைகளே நாம் வாழும் தமிழ்நாட்டையும்,உலகத்தையும் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கின்றன;கோவில் சன்னிதானத்தில் இருப்பவர்களிடமும் பணத்தாசை புகுந்துவிட்டது;கர்மசிரத்தை எனப்படும் பொறுப்புணர்ச்சி இன்று நமக்கு எப்போது வருகிறது தெரியுமா?
ஒரு பேராபத்து வரும்போது அல்லது ஒரு பெரிய அதிர்ஷ்டம் வரப்போவதை உணரும்போது மேலும் சிலபல காரியங்களில் ஈடுபடும்போது!!!


ஒவ்வொரு சராசரி ஆணுக்கும்,பெண்ணுக்கும் அடிப்படைத்தேவையான நிரந்தரமான வேலை அல்லது தொழில்; கடன் இல்லாத வாழ்க்கை,நோய் அல்லது எதிரிகளற்ற தினசரி வாழ்க்கைமுறையை உருவாக்கவே ஆயுள் முடிந்துவிடுகிறது.அப்படி உருவாக்கிடவே ஆன்மீகக்கடல் வழிகாட்டுகிறது.அப்படிப்பட்ட அடிப்படைத் தேவைகளை உருவாக்கியப்பின்னர்,கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வெகு சிலருக்கே உருவாகிறது;


ஒரு உதாரண குடும்பம்: அந்த குடும்பத்தில் அப்பா அரசு ஊழியர்;அம்மா இல்லத்தரசி;இவர்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே! அரசு ஊழியராக இருக்கும் கணவனது ஒழுக்கம் பற்றி விவரிக்கமுடியவில்லை;இதனால் வீட்டுக்கு முழுச்சம்பளம் வருவதில்லை;அந்த இல்லத்தரசி என்ன செய்வாள்? பாவம்! 


தினமும் பக்கத்துவீடுகளிலும் தெருவில் இருக்கும் உறவினர்களிடமும் கடன் வாங்கி மூன்று மகன்களையும் படிக்க வைத்துவிட்டாள்;மூத்தவன் அரசு வேலையில் மிகுந்த போராட்டத்துடன் சேர்ந்துவிட்டான்;அடுத்தவன் வட நாட்டுக்கு போனவன் தகவல்கூட சொல்லவில்லை;மூன்றாமவன் இப்போதுதான் சென்னையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்;காலங்கள் மாறுகின்றன;மூத்தவன் அரசுப்பணியில் சேர்ந்த சில வருடங்களில் பழைய அன்போடும் பாசத்தோடும் இருக்கவில்லை என்பதை அம்மா புரிந்துகொண்டாள்;அவனுக்கு பெண் பார்க்கும் வேளைகளில் பெண் வீட்டார் தனது மூத்தமகனை முடிக்கும் விதமாக வருவது தெரிந்தால்,ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறாள்;இந்த சூழ்நிலையில் அந்த மூத்தமகனுக்கு வயது 40 ஐத்தாண்டிவிட்டது;ஒவ்வொரு மாதமும் மூத்த மகன் தரும் சம்பளப்பகுதியில் தனக்கென்று ஒதுக்கி வைத்துக்கொண்டே இருந்திருக்கிறாள்;அப்படி ஒதுக்கி வைத்த பணத்திலிருந்து இப்போது அந்த அம்மா மாதாந்திர வட்டி வருகிறது;அதுவும் எவ்வளவு? தாம் எதிர்பார்க்கும் தொகை வரத்துவங்கியிருக்கிறது;இப்போது கர்மசிரத்தையாக மூத்த மகனுக்கு வரன் தேட ஆரம்பித்திருக்கிறாள்;ஆனால்,அவள் எதிர்பார்க்கும் வரன் தான் கிடைக்கவே இல்லை;



இதே சூழ்நிலை சாஃப்ட்வேரில் பணிபுரியும் பல பெண்களுக்கும் உருவாகியிருக்கிறது;இதனால் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை சில லட்சங்களைத் தொட ஆரம்பித்திருக்கிறது.ஒரு நாட்டில் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைக் கடந்துவிட்டால்,அந்த நாட்டில் அழிவுகள் இயற்கையால் ஏற்படும்;இதை யாருக்கு புரியவைக்க? எந்த சட்டத்தினால் இதை மாற்றியமைக்க?இதிலே பல நகைச்சுவை கலந்த கொடூரங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.பாவம் முதிர்கன்னிகளும்,முதிர் இளைஞர்களும்!!!


37.எனவே,தினமும் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஒரு மணி நேரம் வரை ஜபிப்போம்;


அல்லது


தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவோம்;


அல்லது


வாரம் ஒரு நாள் வீதம் எட்டு வாரங்களுக்கு மட்டும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று வழிபாடு செய்வோம்;இதன் மூலமாக நமது கடுமையான சிக்கல்கள் உடனே தீரத்துவங்கும்;


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment