Thursday, November 24, 2011

குபேரகிரிவலத்தை நமக்கு அறிமுகப்படுத்திய அமரர் டாக்டர் பி.எஸ்.பி.ஐயா அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!





திருவண்ணாமலை குபேர கிரிவலம் சூட்சமத்தை முதன்முறையாக உலகத்திற்கு அறிவித்த எனது மானசிக குரு "ஜோதிட தந்தை-ஆன்மிக அருளாளர்" பெரியவர் அமரர் டாக்டர்.பி.எஸ்.பி அய்யாஅவர்களுக்கு கூகுள் நன்றி..!! 

இலட்சகணக்கான வாசகர்களையும் ,பல்லாயிரக்கணக்கான ஜோதிட மாணவர்களையும் பெற்ற (யுனிவெர்சல் ரிசர்ச் அகாடமி /பி.எஸ்.பி யின் விடியல் மாத இதழ் நிறுவனர்) அமரர் பி.எஸ்.பி அய்யா அவர்கள் ,பல வருடங்களுக்கு முன்பு தமது 'பி.எஸ்.பியின் விடியல்' மாத இதழ் மூலமாகவும் ,தமது நேரடி ஜோதிட மாநாடுகள்- சொற்பொழிவுகள் மூலமாகவும் & பல பத்திரிக்கைகள் மூலமாகவும் அனைவரும் பயன் அடையவேண்டி  சேவை மனப்பான்மையுடன் வெளிப்படுத்திய குபேர கிரிவலம் சூட்சமத்தை ,அடியேனும்- நாங்களும் சேவை மனப்பான்மையுடன் இங்கு அனைவருடனும் பகிர்ந்துகொண்டோம் ...!!

சேவை ,இறைத்தொண்டு போன்றவற்றை போதித்த எனது மானசிக குரு "ஜோதிட தந்தை-ஆன்மிக அருளாளர்" பெரியவர் அமரர் டாக்டர்.பி.எஸ்.பி அய்யா அவர்கள் வழிநின்று தொண்டாற்றுவோம்...!! தொண்டு உள்ளத்துடன்  இறைவழிபாட்டை மேற்கொண்டால் மட்டுமே சுபிக்ஷம் கிட்டும்...!!! 

அய்யா அவர்களுடைய மகன் திரு.டாக்டர்.விஜய்பாலா பி.எஸ்.பி அவர்கள் நேற்றைய "குபேர கிரிவலம்" நிகழ்ச்சியில் அனைவர் முன்னிலையிலும்  அறிவித்தபடி ,மாதந்தோறும் "மாதசிவராத்திரியில்" திருவண்ணாமலை ஈசனை வணங்கி வழிபடுதல் மற்றும் அன்னதானம் போன்றவற்றை அனைவரும் கடைபிடிக்கவும். பக்தர்களுக்கு கூடுதல் ஏற்பாடுகளை செய்துதரும்படி திரு.டாக்டர்.விஜய்பாலா பி.எஸ்.பி அவர்கள் கோயில்அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...!!!! 
வாழ்க வளமுடன்...




4 comments:

  1. எங்களை வழி நடத்தியமைக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  2. please ask temple officers proper arrangement for darshan at next time

    ReplyDelete
  3. Thanks for creating the awarmess.A job well done.:]

    ReplyDelete