Sunday, May 22, 2011

நமது ஆசை நிறைவேற எப்படி ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?






மஞ்சள்விரிப்பில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்து,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்.நெற்றியில் விபூதி(திருநீறு) பூசிக்கொண்டோமா? என்பதை பார்த்துக்கொள்ளவும்.செல்போன்,டிவி,காலிங் பெல் இவற்றை மவுனமாக்கிக் கொள்ள வேண்டும்.(அல்லது அதிகாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் மற்றும் இரவு தூங்குவதற்கு முந்திய ஒரு மணிநேரம் வரையிலும் எந்த தொந்தரவும் இராது)

முதலில் ஓம் (உங்களின் குலதெய்வத்தின் பெயர்) நமக

அடுத்து ஓம் கணபதியே நமக

அடுத்து ஓம் (உங்களின் இஷ்ட தெய்வத்தின் பெயர்) நமக என வரிசையாக மனதுக்குள்,உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.

இப்போது உங்களின் நியாயமான ஆசை என்ன வென்பதை நினைத்துக் கொள்ள வேண்டும்.

(சில உதாரணங்களைப் பார்ப்போம்:இந்த வருடம் எனக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும்

நான் விரும்பும் படிப்பில் கவுன்சிலிங்கில் சேர வேண்டும்

எனது இப்போதைய மாத வருமானம் ரூ.15,000/-இது ரூ.45,000/-ஆக உயர வேண்டும்.

எனது நோய் விரைவில் தீர வேண்டும்

எனது பிரிந்த தம்பி என்னிடம் வந்து பேச வேண்டும்

எனது 2 லட்சம் ரூபாய் கடன் தீர வேண்டும்

எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க வேண்டும்

என உங்களுக்கு விருப்பமான,நியாயமான,யாருக்கும் தீங்கு தராத ஒரு கோரிக்கையை நினைத்துக்கொள்ளவும்.ஒரு முறை நினைத்தால் போதுமானது)

பிறகு,ஓம்சிவசிவஓம் ; ஓம்சிவசிவஓம்; ஓம்சிவசிவஓம் என தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஜபித்து வர வேண்டும்.

சிலருக்கு 10 நாளுக்குள் பலன் கிடைக்கத் துவங்கும்;சிலருக்கு 45 நாளாகலாம்;சிலருக்கு ஆறுமாதங்கள் ஆகலாம்;சிலருக்கு ஓரிரு வாரங்களிலேயே பலன் கிடைக்கத் துவங்கும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

ஓம்சிவசிவஓம்

1 comment: