Tuesday, May 10, 2011

சனிதோஷம் நீக்கும் முருகக் கடவுள்:இராமநாதபுரம்




சனிபகவானின் தோஷத்தினால் வாழ்வே வெறுத்துப்போயிருப்பர் சிலர்.உதாரணமாக இந்த 2011 முடியும் வரையிலும் கன்னிராசிக்கு ஜன்மச்சனியும்,கும்பராசிக்கு அஷ்டமச்சனியும் நடைபெற்றுவருகிறது.2012 ஜனவரி முதல் மீனராசிக்கு அஷ்டமச்சனியும்,துலாம் ராசிக்கு ஜன்மச்சனியும் கடகராசிக்கு அரை அஷ்டமச்சனியும் நடைபெற இருக்கிறது.

இவர்கள் ராமநாதபுரம் பேருந்து நிலையம் எதிரே இருக்கும் வழிவிடும் முருகன் கோவிலுக்குச் செல்வது அவசியமாகும்.இந்த கோவிலில் சனிபகவானின் தாயாராகிய சாயாதேவி மரமாக இருக்கிறாள்.இந்த மரத்தை “சாயாமரம்” என்றே அழைக்கின்றனர்.இங்குவந்து சாயாமரத்தை வழிபடும் பக்தர்களுக்கு சனி தோஷம் உடனே விலகிவிடும்.ஏனெனில்,சனிபகவான் தனது தாயின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு,தனது கெடுபலன்களைக் குறைத்துக்கொள்வதாக ஐதீகம்.

இதே வழிபாடு இலங்கை கதிர்காமம் முருகன் கோவிலிலும் இருக்கிறது.



No comments:

Post a Comment