Tuesday, June 9, 2009

ஆழ்மனதின் சக்திகள்:அனுபவ உண்மை

ஆழ்மனதைப் பயன்படுத்தி நமது லட்சியங்களை அடைவது எப்படி?

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக முடியும்.அதற்கு வேண்டியதெல்லாம்
இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தினமும் காலை 15 நிமிடம் மற்றும் மாலை 15 நிமிடம் ஒரு குறிப்பிட்ட தியானம் செய்ய வேண்டியதே!

அது எப்படி தியானம் செய்தால் கோடீஸ்வரராக முடியும்.நாம் ஒவ்வொருவரும் கடவுள்தன்மையோடு தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.ஆனால் அதை நாம் உணராமல் இருக்கிறோம்.
www.alphamindpower.net என்ற இணையதளத்திற்குச் செல்லுங்கள்.இது சென்னையிலிருந்து செயல்படும் ஒரு தமிழ் இணையதளமாகும்.
இதில் கூறப்பட்டுள்ள நாளில் உங்களுக்கு அருகிலுள்ள நகரில் ஆல்பா தியானப் பயிற்சியில்(தமிழில் அல்லது ஆங்கிலத்தில்) கலந்து கொள்ளுங்கள் । பயிற்சிக்கட்டணம் உண்டு;கலந்து கொண்ட பிறகு உங்களது நியாயமான ஆசைகள் நிஜமாகும் என்பதை உணரலாம்.
எந்தெந்த ஆசைகள் நிறைவேறும்?
1.ஐ.ஏ.எஸ் ஆவது
2.மாநிலத்திலேயே முதல் மாணவராவது
3.ஒரு கோடி ரூபாய்கள் 5 வருடங்களில் சம்பாதிப்பது
4.குடிக்கும் கணவன்/சகோதரன்/அப்பாவை குடிக்காமல் நிறுத்தச்செய்வது
5.குடும்பப்பிரச்னைகள் தீர்வது
6.கடன் தீர்வது
7.நீண்டகால உடல் அல்லது மன நோய் தீர்வது
8.செய்யும் வேலையில் இன்னும் கவனமாக செயல்பட்டு பதவி உயர்வுகிடைப்பது
9.எல்லோரும் வெறுக்கும் நம்மை நேசிக்கச்செய்வது
10.பொருளாதார வளம் அடைவது
11.இன்னும் நிறைய
இதெல்லாம் எப்படி சாத்தியம்?நான் நம்ப மாட்டேன் எனக்கூறுகிறீர்களா?
இந்த அறையில் டாடா, ரிலையன்ஸ்,ஓடபோன், ஏர்செல், ஏர்டெல்,எம்.டி.எஸ் மற்றும் செல் ஒன்னின் செல்போன் அலைகள் இருப்பது உண்மைதானே!அவற்றைப்பார்க்க முடியுமா? உரிய செல் எண்ணுடன் செல்போனை ஆன் பண்ணினால்தானே உணர முடியும்.அது போலத்தான்.
இருந்தாலும் சுருக்கமாக ஏற்கனவே இந்த ஆன்மீகக்கடலில் விளக்கியுள்ளேன்.
மீண்டும் சுருக்கமாக:
மனித மனம் இரண்டு பெரும் பிரிவுகளாக செயல்படுகின்றன.ஒன்று மேல் மனம்.இதற்கு ஓரளவே சக்தி உண்டு.பெயர்கள்,நமது வீடு,நமது அலுவலகம்,படிக்கும்/படித்த பள்ளி/கல்லூரி இவை ஞாபகமிருக்கும்.
மற்றது ஆழ்மனம்.இதைப் பற்றி நாம் அதிகம் அறிய வில்லை.இதன் சக்தி எல்லையற்றது.நாம் மனம் இதயத்தில் இருப்பதாக நம்புகிறோம்.ஆனால் நமது மனம் நமது வலப்பக்க மூளையில் இருக்கிறது.இதற்கு திரைப்படம் போலக் காட்சிகள் மட்டுமே தெரியும்.இது முழுக்க உணர்வுகளால் மட்டுமே ஆனது.
நாம் பிறந்ததுமுதல் மரணம் அடையும் வரை நமது வாழ்வில் நடந்த நடக்கும் நடக்கப்போகும் அத்தனை சம்பவங்களும் இங்கே பதிவாகிக்கொண்டே இருக்கின்றன.எதையெல்லாம் நாம் அடிக்கடி நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ அது மேல்மனதைக்கடந்து ஆழ்மனதில் பதிவாகிவிடுகிறது.
எதெல்லாம் ஆழ்மனதில் பதிவாகிறதோ(அது நல்ல விஷயமோ கெட்டவிஷயமோ எதுவானாலும்),அதை ஆழ்மனமானது விண்வெளியில் உள்ள பிரபஞ்சமனத்திடம் அஞ்சல் செய்துவிடுகிறது.
பிரபஞ்ச மனதில் பதிவான உடனே அந்தக் காட்சி நமது நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்துவிடுகிறது.

நாம் காலையில் தூங்கியெழும் சில நிமிடங்களுக்கு முன்பாக பால்க்காரனின் சப்தம்,பறவைகளின் ஒலி முதலியவற்றைக் கேட்டிருப்போம் இல்லையா? அதுதான் நமது ஆழ்மனம் விழித்திருக்கும் நேரம்.
அதன்பிறகு ஒருநாளில் அடிக்கடி நமது ஆழ்மனம் விழிப்பு நிலைக்கு வரும்.ஆனால் அது எப்போது என்பதை நம்மால் உணர முடியாது.
இந்த ஆல்பா மைண்டு தியானத்தில் நாம் விரும்பும்போது நம்மால் நமது ஆழ்மனதை திறக்கச் சொல்லித்தருகிறார்கள்.அப்படித் திறந்து நமது நியாயமான ஆசை/லட்சியங்களை ஆழ்மனதில் பதியச்செய்கிறார்கள்.நமது லட்சியங்களை நிறைவேற்ற நமது ஆழ்மனம் உதவுகிறது.
இந்த ஆல்பா தியானப்பயிற்சி 5 லெவல்களைக் கொண்டது.
இதில் 1ஆம் லெவலை மட்டுமே தொடர்ந்து பயிற்சி செய்தால் போதும்.நாம் கோடீஸ்வரராக முடியும்.இப்படி கோடீஸ்வரரானவர்கள் பற்றி அறிய www.alphamindpower.net-இல் Testimonial பகுதியைப் பார்க்கவும்.
குறிப்பு:எல்லோரின் ஆசையும் கோடீஸ்வரராவது என்று இருக்காது.சிலர் அரசுத் தேர்வில் வெற்றி பெறுவதாக இருக்கலாம்.சிலர் காதலில் வெற்றியாக இருக்கலாம்.சிலர் சினிமாவில் ஜெயிப்பதாக இருக்கலாம்.சிலர் வெளிநாட்டில் குடியேறுவதாகக்கூட இருக்கலாம்.உங்கள் ஆசை எதுவாக இருந்தாலும் அது நியாயமாக இருக்கவேண்டும் அது மட்டுமே நிபந்தனை.முயன்று பாருங்கள்.
எனது ஆல்பாதியான பயிற்சிப்படி எனது நியாயமான ஆசை ஒன்று நிறைவேற மூன்று மாதங்கள் ஆனது.மூன்றாவது மாதத்திலிருந்து எனது ஒரு லட்சியம் நிறைவேறுவதற்கான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.நான் ஒன்றரை வருடங்களாக ஆல்பா தியானம் செய்து வருகிறேன்.

No comments:

Post a Comment