Saturday, January 9, 2021

வழிகாட்டும் குருவின் அருளைப் பெற

 

         வழிகாட்டும்  குருவின் அருளைப் பெற

 

உங்களுடைய ஜன்ம நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாகக் கொண்டு 15 வது நட்சத்திரத்தை கண்டுபிடியுங்கள்;

அந்த நட்சத்திரத்தில் யார் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார் என்பதை தேடிக் கண்டுபிடியுங்கள்;அவர் சித்தராக இருந்தாலும் சரி;ரிஷியாக இருந்தாலும் சரி,மகானாக இருந்தாலும் சரி;துறவியாக இருந்தாலும் சரி;சத்குருவாக இருந்தாலும் சரி;

 

ஒவ்வொரு ஊரிலும் அல்லது நீங்கள் இப்போது வசிக்கும் மாவட்டம் அல்லது ஊரில் அப்படிப்பட்ட மகான் ஜீவசமாதி ஆகி இருப்பார்; அவரது பெயரை தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் ஒரு முறையும்,இரவில் தூங்கச் செல்லும் முன்பாக ஒரு முறையும் கூறி வாருங்கள்:

உதாரணமாக,உங்களுக்கு அகத்தியர் தான் வழிகாட்டும் குருவாக அமைந்திருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்;

 

தினமும் காலையில் தூங்கி எழுந்ததும், ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;

 

இரவில் தூங்கச் செல்லும் போது,ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;

 

அப்படி  (குறைந்தது)   3 ஆண்டுகள் வரை  (அதிக பட்சமாக வாழ்நாள் முழுவதும்) ஜபித்து வர,உங்களுடைய வழிகாட்டும் குருவின் சூட்சும வழிகாட்டுதல் உங்களுக்கு இப்பிறவி முழுவதும் கிடைக்கும்!

 

உங்களுடைய வாட்ஸ் அப் மற்றும் முகனூல் பக்கத்தில் வழிகாட்டும் குருமார்கள் பட்டியல் பாகம் 8 அல்லது 9 அல்லது 10 என்று வரும்;அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்;

நேரடியாக வேண்டும் என்பவர்கள் +91 9092116990 என்ற எண்ணுக்கு உங்கள் ஊர்,பெயரைக் குறிப்பிட்டு,வழிகாட்டும் குருமார்கள் பட்டியல் வேண்டும் என்று தெரிவிக்கலாம்;

 

No comments:

Post a Comment