Saturday, January 9, 2021

உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலைப் பெற

 

உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலைப் பெற

 

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் நிர்வகித்து வருபவர் அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையார்! அவரது இதயத்தில் இருந்து உதயமான முதல் சித்தர் தான் அகத்தியர்;

 

அகத்தியர் சித்தரின் பரம்பரையில் உருவாகி,அங்காளபரமேஸ்வரியின் அருளைப் பெற்ற சித்தரின் பெயர் இடியாப்ப சித்தர்!

இடியாப்பத்திற்கு முதலும் முடிவும் கிடையாது;அது போல,இடியாப்ப சித்தரின் அருளைப் பெற்றால் நமக்கு பிறவிச் சுழல் இருக்காது;

ஒவ்வொரு தமிழ் மாதமும்   நம்முடைய பிறந்த நட்சத்திரம் வரும் நாளன்று அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;  பின்வரும் இடியாப்ப சித்தரின் அருளைப் பெற்றுத் தரும் மந்திரத்தை ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்;

 

ஓம் ஸ்ரீசர்வ ஸ்ரீசாக்த பரப்பிரம்ம மகரிஷி

மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய

இடியாப்ப சித்த ஈச மஹராஜ்கீ ஜெய்!

 

 

நன்றி:ஸ்ரீ அகஸ்திய விஜயம்

 

முக்கிய குறிப்பு:தொலை தூர நாடுகளில் வசித்து வருபவர்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே வேறு மாநிலங்களில் வாழ்ந்து வருபவர்கள்,தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தாலும் சொந்த ஊரை விட்டு எங்குமே செல்ல இயலாதவர்கள்,கடுமையான கர்மவினைகளில் இருந்து மீள விரும்புவோர் தினமும் வீட்டில் காலையில் 108 முறை ஜபிக்கலாம்;

 

தினமும் உள்ளூர்  விநாயகர் கோவில்,  சிவாலயம்,விஷ்ணு ஆலயம்,முருக ஆலயம்,அம்பாள் ஆலயம்,ஜீவசமாதிக்கு சென்று வருபவர்கள் அங்கேயே 108 முறை ஜபித்து வரலாம்;

 

சிலருக்கு ஜபம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்வார்கள்;அவர்கள் இந்த மந்திரத்தை தினமும் காலை அல்லது மாலை அல்லது இரவில் 108 முறை எழுதி வர வேண்டும்;ஐந்து ஆண்டுகள் வரை எழுதி வர வேண்டும்;

No comments:

Post a Comment