Monday, January 11, 2021

சிவமஹான் வீரப் பிரம்மம் அவர்களின் சூட்சும வழிகாட்டுதலைப் பெற

 


இன்றைய ஆந்திரமாநிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் வீரபிரம்மம்! இவர் ஒரு தலைசிறந்த சிவமகான் ஆவார்;கலியுகத்தில் என்னவெல்லாம் நடைபெறும் என்பதை இவர் அக்காலத்தில் ஒலைச்சுவடியில் எழுதி வைத்துள்ளார்;ஒலைச்சுவடித் தொகுதியில் இருந்து சிறு பகுதியை புத்தகமாக அவரது வழித்தோன்றல்கள் வெளியிட்டுள்ளனர்;

அந்த புத்தகத்தின் பெயர்:கால ஞானம்!


கலியுகம் முடியும் வரை என்னென்ன நடைபெறும்?என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்;அவரது எழுத்தின் முன்பாக நார்ஸ்டர்டாமஸ் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்;நார்ஸ்டர்டாமஸின்  நூற்றாண்டுகள் புத்தகத்தை விடவும் மிகவும் எளிமையாக,எல்லோருக்கும் புரியும் படியாக சிவமகான் வீரப்பிரம்மம் தனது சிவ அருளால் நமக்கு வழங்கியிருக்கிறார்;


நார்ஸ்டர்டாமஸை மேற்கு நாடுகள் தூக்கிவைத்துக் கொண்டு ஆட்டட்டும்;ஆனால்,எதிர்காலத்தில் நடைபெற இருப்பதை எழுத நார்ஸ்டர்டாமஸிற்கு துணை இருந்தது அவரது காசிப் பயணமே!

 கி.பி.1400களில் நார்ஸ்டர்டாமஸ் நமது நாட்டிற்கு வந்து மூன்று ஆண்டுகள் காசியில் தங்கி ஜோதிடம் கற்றுக் கொண்டார் என்பதை எவரும் சொல்வதில்லை;


ஆனால்,சிவமகான் வீரப்பிரம்மம் ஈசனிடம் பேசும் திறன் பெற்றவர்;அவர் ஈசனிடம் நினைக்கும் போதெல்லாம் உரையாடி கால ஞானத்தை எழுதியிருக்கிறார்;தமிழில் கற்பகம் புத்தகாலயம் இதை வெளியிட்டுள்ளது;


சிவனருள் கிட்டிட ஒரு அரிய சிவமந்திரத்தை சிவமகான் வீரபிரம்மம் அவர்கள் நமக்கு உபதேசித்துள்ளார்;


இதை 25,000 தடவை ஜபித்தாலே போதும்;இந்த மந்திரத்தை நமக்கு உபதேசித்த சிவமகான் வீரபிரம்மத்தின் அருளும்,சூட்சும வழிகாட்டுதலும் நமக்கு கிட்டும்;முயற்சி செய்வோமா?


ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீரீம் நமசிவாய பிரம்மனே நமஹ


ஒருநாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,ஓராண்டு தினமும் ஜபித்துவந்தாலே நமது ஜப எண்ணிக்கை 25.000 ஐத் தொட்டுவிடும்;


நம் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றும் ஆற்றல் நமது மந்திர ஜபம்,நாம் சில குறிப்பிட்ட ஆலயத்தில் குறிப்பிட்ட நாளில் செய்யும் அன்னதானம்,நாம் சிலருக்கு குறிப்பிட்ட கிழமையில் செய்யும் உதவி=இவைகளுக்கு மட்டுமே உண்டு;


வாழ்க பைரவ அறமுடன்:வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment