Sunday, July 15, 2018

பாரதத்தேசத்தின் எதிர்காலம் பற்றி விசிறிச் சாமியார் அவர்களின் கருத்துக்கள்


உத்திரப்பிரதேசமாநிலத்தில் பிறந்து,நமது அண்ணாமலையில் ஐக்கியமாகிவிட்டவர் விசிறிச்சாமியார் அவர்கள்;இவர் ஒருமுறை மட்டுமல்ல;பல முறை கேரளாவில் இருக்கும் ஆனந்த ஆஸ்ரமத்திற்குச் சென்றவர்;அங்கே ஆனந்த ஆஸ்ரமத்தை ஸ்தாபித்த ராமதாஸ் சுவாமிஜியை சந்தித்து ஆசி பெற முயன்றிருக்கிறார்;அவர்தான் இவரை பிச்சை எடு என்று ஆசி கூறியுள்ளார்;

அவரது வார்த்தைகளாலேயே விசிறிச்சாமியார் தன்னை பிச்சைக்காரன் என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்;அண்ணாமலையாரை அப்பா என்றே அழைத்துக் கொள்ளத் துவங்கினார்;

பாரத தேசம் என்பது எனது நாடு; எனது ‘அப்பா’வின்(அண்ணாமலையாரின்) பூமி;இப்பிச்சைக்காரனின் (விசிறிச்சாமியார்) இதயம்;புண்ணிய பூமி;வேத பூமி;இப்பிச்சைக்காரனின் விளையாட்டு மைதானம்;

நமது பாரததேசம் செழித்தோங்கி,அண்டசராசரத்திற்கு எல்லாம் வழிகாட்டும்;ஒவ்வொரு துறையிலும் பாரதம் பிற நாடுகளுக்குத் தலைமையேற்று நடத்தும்;அண்டம் முழுவதும் பாரதம் சொல்லுவதையே கேட்கும்;

எல்லாத்துறைகளிலும் மற்ற நாடுகளுக்குப் பாதையினை,நல்லப் பாதையினை பாரதம் காட்டும்;
அணு ஆயுதங்கள் போன்ற தீவினை ஆயுதங்களில் இருந்து நமது தாயகத்தை எனது ‘அப்பா’(அண்ணாமலையார்) காப்பாற்றுவார்;பாரதம் எந்தப் போரிலும் தாக்கப்படாதவாறு அவர் பார்த்துக் கொள்ளுவார்;பாரதத்தின் மேல் எந்த ஆபத்தும் வந்து தாக்காமல் அவர் பார்த்துக் கொள்ளுவார்;

உலகம் முழுவதற்கும் பாரதம் தலைமையேற்கும்;இந்துக்களின் சன்மார்க்கம் உலகெங்கும் பரவும்;இது விரைவில் நடக்கும்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்

No comments:

Post a Comment