Sunday, July 15, 2018

கதைதான் இந்துவின் கண்ணைத் துடைக்க!




ஐரோப்பாவில் கோடிக்கணக்கில் பிணங்கள் விழுந்த ‘உலக மகா யுத்தங்களும்’ , முஸ்லீம் & கிறிஸ்தவ சிலுவைப் போர்களும் ஜிஹாத்களும்,குறிப்பாக கிறிஸ்தவ ஹிட்லர் யூதர்கள் மீது நடத்திய இன அழிவுக் கொடூரமும்,சீன ரஷ்ய கம்யூனிஸ கசாப்புகளும் மனித குலத்திற்கு ஒரு வேலை வைத்தன.(முடிந்தவரைக்கும்) பிணப்பட்டியல் தயாரிப்பதுதான் அந்த வேலை!

பாரதத்தில் இந்த வேலை நடப்பதேயில்லை என்று பிரஞ்சுப்பத்திரிகையாளரும்,இந்துத்துவ ஆதரவாளருமான பிரான்ஷ்வா கொத்தியே போன்றவர்கள் ஆதங்கப்படலாம்.இந்தியாவின் ஆங்கில எழுத்தாளர் குஷ்வந்த்சிங் அதுபோல ஏதோ ஒன்றை செய்து புண்ணியம் கட்டிக்கொண்டார்; Train to Pakistan என்ற ஆங்கில புனைக் கதை வாயிலாக நிறைய இந்துக்களின் பிணங்கள் பாகிஸ்தானிலிருந்து வந்ததையும் சுவடு தெரியாமல் அவற்றை மண்ணில் புதைத்தும்,சட்லஜ் நதி வெள்ளத்தில் தள்ளியும் அரசியல் தலைமை சுதந்திர பாரத இந்துக்களை உண்மை தெரியாத அசடுகள் ஆக்கும் விபரீத முயற்சியில் இறங்கியதையும் வெகு சன்னமான கதைப்போர்வை போர்த்தி வழங்கியிருக்கிறார் குஷ்வந்த்சிங்!

அகண்ட இந்து ராஷ்டிரம் சிதைந்தபிறகும், பல பத்தாயிரம் மக்கள் ஜிகாதிகளின் குண்டு வெடிப்புகளால்,காஷ்மீரக் ‘களையெடுப்பால்’ பிணமான பிறகு அவரது அந்த ரயில்  கதையை இன்று தமிழாக்கி வெளியிட்டுள்ளது கிழக்கு பதிப்பகம்.
எனவே,நூலின் பின் அட்டை விளம்பர வாசகம்,
“எழுதப்பட்டு 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் வலுவாக நம்முன் நிற்கிறது இந்தக் கதை”
என்று சுட்டிக்காட்டுவது வெகு பொருத்தம்.
என்ன நோக்கத்துக்காக இந்தியாவின் காங்கிரஸ்இஸ்லாமியர்களை தாஜா செய்கிறது என்பதற்கான காரணங்களை இந்த நூலை வாசித்ததும் புரிந்து கொள்ளலாம்.

நூல்:பாகிஸ்தான் போகும் ரயில்
நூலாக்கம்:குஷ்வந்த் சிங்
தமிழாக்கம்:ராமன் ராஜா
வெளியிட்டோர்:கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்:272
விலை:ரூ.200/-

No comments:

Post a Comment