Monday, March 12, 2012

பைரவர் என்ற பெயரின் பொருள்



சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்றும்,என்றும் இருப்பது என்றும் பொருள் உண்டு.முருகன் என்பதற்கு அழகு,இளமை என்று பொருள் உண்டு.அது போலவே பைரவர் என்ற சொல்லுக்கும் பொருள் உண்டு.
“ப” என்பது காத்தலைக் குறிக்கும்; “ர” என்பது அச்சத்தால் உணர்த்துதலைக் குறிக்கும்; “வ” என்பது படைத்தலைக் குறிக்கும்.முத்தொழிலையும்(படைத்தல்,காத்தல்,அழித்தல்)       இச்சொல் உணர்த்துகிறது.
இதேபோல் “ப” என்பது பரணத்தை(உயிர்களைப் படைக்கும் தொழிலை)க் குறிக்கும்; “ர” என்பது ரமணத்தை(உயிர்களைக் காப்பதை)க் குறிப்பிடுகிறது; “வ” என்பது வமனத்தை(உயிர்கலின் இயக்கத்தை அழித்து,பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்வதை) உணர்த்துகிறது.
பைரவம் என்னும் சொல்லுக்கு தன்னை உபாசிப்பவனைக் காப்பவன் என்ற பொருளையும், தன் அடியார்களை துன்புறுத்துவோர்களை பயமுறுத்தி அழிப்பவன் என்ற இருவேறுபட்ட பொருள்களையும் குறிக்கும்.
மூவர்க்கும் தேவர்க்கும் காண்பதற்கரிய இறைவன்,காதலாகிக் கசிந்துருகி,அன்புருவாய் மாறும் அடியவர்க்கு,இறங்கி வந்து காட்சி தந்து கருணை புரியும் சிவ வடிவமே மஹாபைரவர் ஆகும்.
கலியுகத்தில் பேசும் தெய்வமே காலபைரவர் ஆவார்.


நன்றி:பைரவ ரகசியம்,பக்கம்2,எழுதியவர்:கொல்லிமலை சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள்






3 comments:

  1. உங்களுக்கு ஒரு ரகசியத்தை கூறுகிறேன்.இப் புவியில் அவதாரம் செய்துள்ள பகவான் கல்கியின் ஜாதகம் எனக்கு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே கிடைத்தது. ஆனால் அதை உரிய காலத்தில் வெளியிட வேண்டும் என்பது எனக்கு குடுத்த கட்டளை அதை வெளியிடும் காலம் வந்து விட்டது . உங்களுக்கு அந்த ஜாதக கட்டத்தை அளிக்கிறேன் .

    ReplyDelete
  2. லக்கினம் கன்னியா லக்கினம்
    அடுத்த இரண்டு கட்டங்களும் சுத்தம்
    நான்கில் சனி
    ஐந்து சுத்தம்
    ஆறு செவ்வாய் ,ராகு
    எழு சுத்தம்
    எட்டு வியாழன்
    ஒன்பது சூரியன்,புதன்
    பத்து சுக்கிரன்
    பதினொன்று சுத்தம்
    பன்னிரெண்டு கேது,சந்திரன்
    இது ராசி கட்டம் தோழரே இந்த ராசிக்காரர் இம் மணிலோ அல்லது வெளிநாட்டிலோ பிறந்திருக்கலாம் அவரை கண்டு பிடித்தால் நீங்கள் நினைக்கும் சித்தர்கள் ஆட்சி வரும்

    ReplyDelete
  3. நண்பரே இது என்ன புது விஷயமாக இருக்கிறது .மேலே உள்ள ஜாதகம் உண்மையா

    ReplyDelete