Monday, November 16, 2009

THIRUKAIYLAYAM


திருக்கையிலாய மலையின் சிறப்புகள்

சிவபெருமான் வாழுமிடம்.திருக்கையிலாயமலைக்குச் செல்லும் வழியில், திருக்கையிலாயத்திலிருந்து தென்கிழக்காக 40 கி.மீ.தூரத்தில் உலகிலேயே உயரமான இடத்தில் (கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிகள்) நன்னீர்த் தடாகம்தான் மானசரோவர்!இது பிரம்மாவால் மானசீகமாகப் படைக்கப்பட்டது.இது 24 கி.மீ.அகலமும்,90 கி.மீ.சுற்றளவும் கொண்டது.320 கி.மீ.பரப்பளவுடன் 250 அடி ஆழத்துடன் உள்நாட்டுக்கடல் போலக் காட்சியளிக்கிறது.
திருக்கையிலாய மலைக்கும் குர்லா மந்தாதா மலைக்கும் இடையே மானசரோவர் இருக்கிறது.

மானசரோவரின் புனித நீரை அருந்துவோர் பல நூறு பிறவியின் பாவங்கள் நீங்கி சுவர்க்கம் அடைவர்.தடாகக்கரை மணல் பல நிறங்களில் காட்சியளிக்கிறது.
இவ்வளவு சிறப்புமிக்க நமது சிவபெருமானின் வீடு, தற்போது சீனாவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கிறது.எனவே, இங்கு செல்ல விரும்புவோர் பாஸ்போர்ட் எடுத்து சீனா செல்வதற்கான விசா எடுத்துச் செல்ல வேண்டும்.
எப்போது நாம் நமது சிவபூமியை திரும்பப்பெறப் போகிறோம்?
இந்த சிவபூமி சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை சீனாவின் அசுர வளர்ச்சியைத் தடுக்க உலகில் யாராலும் முடியாது.
தமிழக இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களே! ஆளும் கட்சியினரே தன்மானச்சின்னமும்,95 கோடி இந்துக்களின் புனித ஸ்தலமுமான திருக்கையிலாயத்தை எப்போது சீனாவிடமிருந்து மீட்கப் போகிறீர்கள்?

No comments:

Post a Comment