Thursday, November 5, 2009

NATIONALSHAME

அந்தமான் தீவுகளை இலங்கையுடன் இணைக்க வேண்டுமாம்
கொழும்பு , வியாழன், 5 நவம்பர் 2009( 20:08 IST )
-->
ஐ।நா.வின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு,தங்கள் நாட்டுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக இலங்கை அயல்விவகாரத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், இதுவிடயமாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இப்பகுதிக்கு உரிமை கோருவது தொடர்பான யோசனையை ஐ.நா. ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் கூறினார்.இலங்கையின் கடல்படுக்கை உரிமைகள் குறித்து கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ரவி கருணாநாயக்கா கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரோகித மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் ஐ.நா ஆணைக்குழுவுக்கு இலங்கை சமர்ப்பிக்கவிருக்கும் உரிமை கோரலானது,தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை உள்ளடக்கி மிகச்சரியாக தீர்மானிக்கப்படும் என்றும்,ஐ.நா இதை 2025 ஆம் ஆண்டுவாக்கில் கவனத்தில் என்றும் கூறினார்.மேலும் ஐ.நா. வின் இந்த நீண்ட காலதாமதம் குறித்து தமது அதிருப்தியையும் ரோகித போகொல்லாகம வெளியிட்டார்.

நன்றி:தமிழ் வெப்துனியா இன்று।

சுயதர்மமும்,சுயச்சார்பையும் இழக்கும் எந்த நாடும் இப்படித்தான் அவமானப்படவேண்டும்।இலங்கையின் பின்னாடி இருந்து இயக்குவது நம்ம பங்காளி பாம்புதின்னி சீனாவேதான்।இத்தாலிக்காரிக்கு இதைப்பற்றி என்ன கவலை।?
எனது நூறுகோடி மக்களே நாம் தினமும் எதைச்சாப்பிடுகிறோம்? எப்போது நயவஞ்சக அரசியல்வாதிகளிடமிருந்து நாம் நம்மையும் நமது நாட்டையும் நமது தன்மானத்தையும் காக்கப்போகிறோம்?சே அவமானமாக இருக்குது.

No comments:

Post a Comment