Showing posts with label சுதேசி. Show all posts
Showing posts with label சுதேசி. Show all posts

Saturday, October 20, 2012

அமெரிக்காவும் வால்மார்ட்டும்!!


ஒவ்வொரு வருடமும் ஒரு அமெரிக்க குடும்பமும் சராசரியாக $4000களை வால்மார்ட்டில் செலவழிக்கிறது. அமெரிக்காவில் வேறு எந்த நிறுவனத்தையும் காட்டிலும்,வால்மார்ட் மிக அதிகளவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்கிறது.அமெரிக்காவில் ஒவ்வொரு $4 களிலும் $1 வால்மார்ட்டில் மளிகைப்பொருட்கள் வாங்கச் செலவிடப்படுகிறது.

எகனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட் என்பது அமெரிக்காவில் உள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி ஒன்று: 2001 லிருந்து 2006ஆம் ஆண்டுக்குள் வால்மார்ட் மற்றும் சீனாவுக்கு இடையே நடந்த வர்த்தகத்தால் அமெரிக்காவில் 1,33,000 உற்பத்தி வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன என்று தெரிவிக்கிறது.

வால்மார்ட் கம்பெனியின் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் அவர்களது குழந்தைகளும் 'மருத்துவ வசதி' திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால்,அவர்களது மருத்துவச் செலவுகளை அமெரிக்க அரசாங்கம் செய்கிறது.வால்மார்ட் கம்பெனி அல்ல!

96% அமெரிக்கர்களுக்கு 20 மைல்களுக்குள் ஒரு வால்மார்ட் கடை உள்ளது.1992 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த சுதந்திர சிறு வணிகர்களின் எண்ணிக்கை 60,000 சரிந்துவிட்டது.

2011 ஆம் ஆண்டில் வால்மார்ட் 'அரசியல் லாபி' செய்ய 7.8 மில்லியன் டாலர்களை செலவழித்தது.இதை செண்டர் பார் ரெஸ்பான்ஸிவ் பொலிடிக்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் ஆராய்ந்து தெரிவித்துள்ளது.இந்தத் தொகையில் பிரச்சாரச் செலவுகள் சேர்க்கப்படவில்லை;

வால்மார்ட் கம்பெனியின் வெறும் ஆறு குடும்பங்களின்(பங்குதாரர்கள்) ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 30% அமெரிக்க ஏழைகளின் ஒட்டு மொத்த சொத்து மதிப்புக்குச் சமம்.

மேலும் சில அவசியமான தகவல்கள்:இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடிகள்;அமெரிக்காவின் ஜனத்தொகை வெறும் 30 கோடிகள்.

இந்தியாவின் டீன் ஏஜ் எண்ணிக்கை 1.1.2012 அன்று 35 கோடிகள்.

இந்தியாவில் இருக்கும் பெட்டிக்கடைகளின் எண்ணிக்கை 4 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த 4 கோடி பெட்டிக்கடைகளால் 12 கோடிப் பேர்களுக்கு தினசரி வேலை வாய்ப்பு அமைந்திருக்கிறது.

அரசியல் பின்பலத்தால் இம்மாதிரியான பன்னாட்டு நிறுவனங்களால் நாம் ஏமாற்றப்படுகிறோம் இந்தியர்கள் உணரும் முன்பே இதுமாதிரியான பன்னாட்டு நிறுவனபூதங்கள் உலகம் முழுவதும் சம்பாதிக்கும் மொத்த லாபத்தை விடவும்,குறைந்தது நான்கு மடங்கு இந்தியாவில் சம்பாதித்துவிடும்.இது நவீன காலனியாதிக்கமே! இவைகளின் ஓராண்டு லாபம் இந்தியாவைத் தவிர்த்து 9,00,000 கோடி ரூபாய்கள் ஆகும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் அரசியல் விழிப்புணர்வோடு இருப்பான்;நாம் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளின் மயத்திலிருந்து மீளவே மாட்டோம்;
நன்றி: சுதேசிச் செய்தி அக்டோபர் 2012

Thursday, November 19, 2009

SWADESHI JAGKRAN Q AND A


சுதேசி கேள்வி பதில்கள்:ஜனவரி 2007 சுதேசிச் செய்தி

1)தேசப்பிதா மகாத்மா அவர்களுடைய கொள்கைகளுக்கும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகளுக்கும் வேறுபாடு உள்ளதா? இடதுசாரிகளுடன் நாம் இணைந்து செயல்படலாமா?


ஏறக்குறைய ஒன்றானாலும் காலங்கள் மாறியதால் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப சுதேசி இயக்கத்தின் செய்முறைகள்தான் மாறியிருக்கின்றன.ஆனால், இடதுசாரிக் கட்சிகள் தொழில்களின் உடைமையை தேசியமயமாக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தினால் விழிப்புணர்வு இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன.எனினும் எங்கெங்கு ஒத்த கருத்து உள்ளதோ அங்கு சேர்ந்து போராடுவதில் தவறில்லை.பதிலளித்தவர்;திரு.முரளிதர் ராவ், அகில பாரத அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.


2)அப்சலை தூக்கிலிட மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி ஒப்படைத்துள்ள ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல் பற்றி?
ஆண்மையான செயல்!! அரசு அலித்தனமாக நடந்துவருகிறது.ராணுவ வீரர்களின் அதிருப்தி பெருகுவது நல்லதற்கான அடையாளம் அல்ல.

3)திடீரென தமிழக மக்களுக்கு பெரியார் பாசம் மீண்டும் தோன்றியுள்ளதே?1

அப்படி எதுவும் இல்லை.ஆளும்கட்சி சாதகமாக உள்ளது.அவ்வளவுதான்.எங்கெங்கு பெரியார் சிலைகள் உள்ளனவோ அவை அரசின் ஆதரவோடு நிறுவப்பட்டுள்ளன.எங்கெங்கு கோவில்கள் உள்ளனவோ அவை மக்களால் நிறுவப்பட்டவை.
பெரியார் திரைப்படம் எடுப்பவர் கூட அரசு போடும் பிச்சைப் பணத்தில்தான் படமெடுக்கிறார்.வாழ்க சுயமரியாதை.

4) வெளிநாட்டுடன் கையெழுத்திடும் ஒப்பந்தங்களின் சாதக பாதக அம்சங்களை புறக்கணிக்க அமெரிக்காவின் இரு அவைகளுக்கும் உரிமை இருப்பது போல நமது நாட்டில் இல்லாதிருப்பது குறைபாடுதானே?

ஜனநாயகம் என்ற பெயரில் கட்சிநாயகம் நடத்திக்கொண்டிருக்கிறோம் நாம்.கட்சியின் கொறடா உத்தரவு என்ற நிலை மாறினால்தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.இவ்விஷயத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தம் அவசியம் தேவை.க்கம்.
ர்;திரு.முரளிதர் ராவ், அகில பாரத அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இய்ுத்து உள்ளதோ அங்கு சேர்ந்து போராடுவதில் தவறில்லை.பதி