Showing posts with label சுதேசி விழிப்புணர்வு இயக்கம். Show all posts
Showing posts with label சுதேசி விழிப்புணர்வு இயக்கம். Show all posts

Saturday, July 16, 2011

சுதேசி கேள்வி பதில்:ஜீலை 2011



கேள்வி:டெல்லி சென்ற ஜெயலலிதா,சிதம்பரம்  எம்.பி.தேர்தலில்  ‘ஏமாற்றி ஜெயித்தவர்’ என பத்திரிகையாளர் மத்தியில் பேசி,பரபரப்பை ஏற்படுத்திவிட்டாரே!

பதில்: நல்ல காரியம் செய்தார் ஜெயலலிதா.அவருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.தமிழகத்தைத் தாண்டி பலருக்கும் சிதம்பரம் எப்படி வெற்றி பெற்றார் என்பது தெரியாது.இதில் பல்வேறு டெல்லி பத்திரிகையாளர்களும்,அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் அடக்கம்.அந்த அளவுக்கு தன் செய்தியை ‘தன்னடக்கமாக’ மறைத்துக்கொண்டவர் சிதம்பரம்.இப்போது குட்டு வெளிப்பட்டவுடன் துடிக்கிறார்.டெல்லியில் உள்ள உட்கட்சி சிதம்பரம் எதிர்ப்பாளர்களுக்கு இது ஒரு நல்ல டானிக்.

கேள்வி:நக்ஸல் உதவிக்காக ஆயுள்தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் டாக்டர் வினாயக் சென்னை திட்டக் கமிஷன் சென்னை திட்டக்கமிஷன் சுகாதாரக்குழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளதே!

பதில்:மன்மோகனும் சிதம்பரமும் முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு தீவிர நக்ஸல் எதிர்ப்பாளர்கள்.ராகுலுக்கு ஒரிஸாவில் டிரைபல் நட்பு.ம.பி.யில் அருகில் இருக்கும் சத்தீஸ்கரில் திக்விஜய்சிங்கின் நட்பு,நக்ஸலுக்கும் மிஷனரிகளுக்கும் உள்ள இணக்கம்,சற்றே சிந்திக்கவும்.சுரணையற்ற அமைச்சர்கள் அவர்களின் முதலாளிகள் சுரண்டலே கதி என்பவர்கள்.

கேள்வி:அண்ணா ஹசாரே,ராம்தேவ் போராட்டங்கள் ‘ஜனநாயக விரோதமானவை’ என்று கபில்சிபில்,பிரணாப் முகர்ஜி கூறுகின்றனரே!

பதில்:ஆம்.வெடி வைத்து அப்பாவிகளைக் கொல்லும் நக்ஸல்கள் ஜனநாயகவாதிகள் என்பதால் அவரது ஆதரவாளருக்கு திட்டக்கமிஷன் பதவி.அப்சலுக்கும் கசாப்பிற்கும் பிரியாணி.ஜனநாயக விரோத ராம்தேவ் கூட்டத்திற்கு தடியடி;கண்ணீர்ப்புகை.ஆகஸ்டு 16 இல் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால் ராம்தேவிற்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என திக்விஜய்சிங்கின் மிரட்டல்.எமர்ஜென்சியை திணித்த காங்கிரஸ்தான் ஜனநாயகக் காவலர்கள்.


Thursday, November 19, 2009

SWADESHI JAGKRAN Q AND A


சுதேசி கேள்வி பதில்கள்:ஜனவரி 2007 சுதேசிச் செய்தி

1)தேசப்பிதா மகாத்மா அவர்களுடைய கொள்கைகளுக்கும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகளுக்கும் வேறுபாடு உள்ளதா? இடதுசாரிகளுடன் நாம் இணைந்து செயல்படலாமா?


ஏறக்குறைய ஒன்றானாலும் காலங்கள் மாறியதால் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப சுதேசி இயக்கத்தின் செய்முறைகள்தான் மாறியிருக்கின்றன.ஆனால், இடதுசாரிக் கட்சிகள் தொழில்களின் உடைமையை தேசியமயமாக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தினால் விழிப்புணர்வு இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன.எனினும் எங்கெங்கு ஒத்த கருத்து உள்ளதோ அங்கு சேர்ந்து போராடுவதில் தவறில்லை.பதிலளித்தவர்;திரு.முரளிதர் ராவ், அகில பாரத அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.


2)அப்சலை தூக்கிலிட மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி ஒப்படைத்துள்ள ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல் பற்றி?
ஆண்மையான செயல்!! அரசு அலித்தனமாக நடந்துவருகிறது.ராணுவ வீரர்களின் அதிருப்தி பெருகுவது நல்லதற்கான அடையாளம் அல்ல.

3)திடீரென தமிழக மக்களுக்கு பெரியார் பாசம் மீண்டும் தோன்றியுள்ளதே?1

அப்படி எதுவும் இல்லை.ஆளும்கட்சி சாதகமாக உள்ளது.அவ்வளவுதான்.எங்கெங்கு பெரியார் சிலைகள் உள்ளனவோ அவை அரசின் ஆதரவோடு நிறுவப்பட்டுள்ளன.எங்கெங்கு கோவில்கள் உள்ளனவோ அவை மக்களால் நிறுவப்பட்டவை.
பெரியார் திரைப்படம் எடுப்பவர் கூட அரசு போடும் பிச்சைப் பணத்தில்தான் படமெடுக்கிறார்.வாழ்க சுயமரியாதை.

4) வெளிநாட்டுடன் கையெழுத்திடும் ஒப்பந்தங்களின் சாதக பாதக அம்சங்களை புறக்கணிக்க அமெரிக்காவின் இரு அவைகளுக்கும் உரிமை இருப்பது போல நமது நாட்டில் இல்லாதிருப்பது குறைபாடுதானே?

ஜனநாயகம் என்ற பெயரில் கட்சிநாயகம் நடத்திக்கொண்டிருக்கிறோம் நாம்.கட்சியின் கொறடா உத்தரவு என்ற நிலை மாறினால்தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.இவ்விஷயத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தம் அவசியம் தேவை.க்கம்.
ர்;திரு.முரளிதர் ராவ், அகில பாரத அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இய்ுத்து உள்ளதோ அங்கு சேர்ந்து போராடுவதில் தவறில்லை.பதி