Friday, September 9, 2016

நமது பக்தி உணர்ச்சி மட்டுமே நம்மைப் பாதுகாக்கும்!



உங்கள் எதிர்காலத்தைத் துல்லியமாக அறிந்தால்,உங்கள் இன்றைய தினம் எப்படி இருக்கும்?

அருள்வாக்கு சொல்பவர்கள் உங்களுக்கு,உங்கள் எதிர்காலம் பற்றி என்ன சொல்கின்றார்களோ,அதே கருத்தைத் தான் திறமை மிக்க ஜோதிடரும் தமது ஜோதிட அனுபவத்தின் மூலமாகத் தெரிவிப்பார்;(என்ன எல்லாத் துறையிலும் போலிகள் அதிகரித்துவிட்டது போல,ஜோதிடத்துறையிலும் போலிகள் அதிகம் தான்;உண்மையான ஜோதிடரை அடையாளம் கண்டறிவது உங்கள் சொந்த பொறுப்பு)

ஜோதிடத்தின் மூலமாகவோ அல்லது அருள்வாக்கு மூலமாகவோ நாம் ஏமாந்திருக்கின்றோம் என்றால் அதுவும் நமது முற்பிறப்புகளின் கர்மவினைகளால் தான்;வேண்டும் என்றே யாரும் ஏமாறுவதில்லை;ஏமாற்றுவதில்லை;

ஜோதிடப்படி,யுத்தக் கிரகங்கள் என்று ஜோதிடக்கலை தெரிவிப்பது சனிக்கிரகத்தையும்,செவ்வாய்க்கிரகத்தையும் தான்;காற்றுக் கிரகமாக சனியையும்,நெருப்புக் கோளாக செவ்வாயையும் வர்ணிப்பது ஜோதிடக்கலையின் வழக்கம்;நவீன விஞ்ஞானமும் தமது ஆராய்ச்சிகளின் மூலமாக இதை உறுதிப்படுத்தியுள்ளது;

செவ்வாய் ஒரு ராசியை 45 நாட்களில் கடந்துவிடும்;சனியோ ஒரு ராசியை கடக்க 900 நாட்கள்=30 மாதங்கள்=இரண்டரை ஆண்டுகள் ஆகும்; 

நெருப்பும் காற்றும் இணைந்தால் என்ன நிகழும்?


தவிர,செவ்வாய் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வக்கிரம் ஆகும்;

தற்போது செவ்வாயின் வக்கிரம் 6 மாதங்கள் 19 நாட்கள் வரை இருந்துள்ளது(வழக்கமான 45 நாட்கள் இல்லாமல்);அதுவும் செவ்வாயின் இரண்டாவது சொந்த வீடான விருச்சிகராசியில்!

 ஏற்கனவே,அங்கே விதியின் நாயகனும்,நமது ஒவ்வொருவருடைய தொழில் அல்லது வேலையை நிர்ணயிப்பவருமான சனி விருச்சிகராசியில் தான் இருக்கின்றார்;இருவரும் ஒரே ராசியில் 26.2.2016 முதல் 9.9.2016 வெள்ளிக்கிழமை காலை 7.16 வரை இருந்துள்ளார்கள்;


நெருப்புகோளும்,காற்றுக்கோளும் ஒரே ராசியில் அதிக நாட்கள் தங்கியதால்,12 ராசிக்காரர்களும் படாத பாடு பட்டுள்ளார்கள்;விருச்சிகராசிக்காரர்களும்,துலாம் ராசிக்காரர்களும் அந்தோ பரிதாபம் என்ற சூழ்நிலைதான்;துலாம் ராசிக்காரர்கள் பலரது ஆயுள் இந்த காலகட்டத்தில் நிறைவடைந்திருக்கின்றது;நாடு நெடுக மட்டும் அல்ல;உலகம் முழுவதுமே கலவரம்,போர்,பூகம்பம்,புயலின் அதிரடித் தாக்குதல்,பெருத்த கனமழை,மக்கள் மனத்தில் போராட்ட மனப்பான்மை அதிகரித்துள்ளது இந்த காலகட்டத்தில் தான்!


வெகு சில விருச்சிகராசிக்காரர்களும்,துலாம் ராசிக்காரர்களும் இந்த கிரகயுத்தத்தில் தப்பிவிட்டார்கள்;அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒராண்டு(26.2.2016க்கு முந்தைய ஓராண்டு) வரை தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்திருப்பார்கள்;

அல்லது தினமும் ஒரு மணி நேரம் சிவாலயத்தில் இருந்திருப்பார்கள்;

அல்லது தினமும் அன்னதானம் ஒருவருக்காவது செய்திருப்பார்கள்;


மேஷராசிக்கு அதிபதியான செவ்வாய்பகவான்,ராசிக்கு எட்டாம் இடத்தை அதிகமான காலம் கடந்ததால்,அவசரப்பட்டு விபத்திலும்,அடிதடியிலும்,தேவையற்ற வம்புவழக்கிலும் சிக்கிக் கொண்டு இன்றுவரையிலும் திண்டாடுபவர்கள் அதிகம்!!!


சனிக்கிரகத்திற்கு நவக்கிரகப்பதவி கொடுத்தவர் மஹாகாலபைரவப் பெருமான்! தினமும் 30 நிமிடத்திற்குக் குறையாமல் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபித்து வந்திருப்பவர்களும் ஆழ்ந்த நிம்மதியாக இருந்திருப்பார்கள்;

தினமும் 108 முறை ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று எழுதி வந்திருப்பவர்களும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்திருப்பார்கள்;

தினமும் சிவாலயம் சென்று ஒரு மணி நேரம் கோவிலுக்குள் தேவாரப்பதிகங்கள் அல்லது ஓம் நமச்சிவாய என்று ஜபித்திருந்தால் அவர்களுக்கும் பெரிய அளவில் துயரம் இருந்திருக்காது;

தினமும் காரம்பசும்பாலை சிவப்பூஜைக்கு அன்பளிப்பாக கொடுத்தவர்களுக்கு ஆழ்ந்த மன நிம்மதி கிடைத்திருக்கும்;

தினமும் பசுவை வலம் வந்தவர்களுக்கும்,பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் கொடுத்தவர்களுக்கும் கசகசப்பு நெருங்கியிருக்காது;

இந்த ஆறரை மாதங்களில் மாதம் ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் வந்தவர்களுக்கு அவ்வளவாக பாதிப்பு வந்திருக்காது;

இந்த காலகட்டத்தில் வில்வக்கன்றுகளை சிவாலயத்தில் நட்டு தினமும் தண்ணீர் ஊற்றியவர்களை மனக்கஷ்டம் நெருங்கியிருக்காது;

இந்த காலகட்டத்தில் தினமும் அல்லது வாரம் ஒருமுறை குலதெய்வத்தை அதன் இடத்தில் சென்று வழிபட்டவர்களுக்கும் ஆழ்ந்த மன அமைதி கிட்டியிருக்கும்;

இந்த காலகட்டத்திற்கு முன்பும்,இப்போதும்,இனியும் தினமும் மஹாவராகி வழிபாடு அல்லது ஸ்ரீசக்கர தியானம் அல்லது ஸ்ரீசக்கர வழிபாடு அல்லது சித்தர் வழிபாடு அல்லது வாசியோகம் அல்லது தினமும் அன்னதானம் செய்தவர்களும் ஆழ்ந்த மன அமைதியை அடைந்திருப்பார்கள்!!!

செவ்வாயின் அதிதேவதையான முருக்கடவுளைச் சரணடைந்தவர்ளும் கந்தனின் அருளால் ஆழ்ந்த நிம்மதியோடு வாழ்ந்திருப்பார்கள்;

யாராலும் யாருடைய தலையெழுத்தையும் மாற்ற முடியாது;ஆனால்,நமது விடாமுயற்சியால்(தினமும் மந்திர ஜபம் அல்லது சிவாலயம் செல்லுதல் அல்லது மேலே கூறியவற்றில் ஏதாவது ஒன்று) தலைவிதியையும் மாற்றிவிட முடியும்;மன அமைதியோடு வாழவும் முடியும்;


தகவல் தொழில்நுட்பமோ அல்லது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறமையோ அல்லது மிதமிஞ்சிய அரசியல் செல்வாக்கோ அல்லது தனக்குத் தெரிந்த மாந்திரீக சக்தியோ ஒருபோதும் நம்மை காப்பாற்றாது;

நமது தினசரி மந்திர ஜபம் மட்டுமே நம்மை பாதுகாக்கும்;கடந்த 20,00,000 ஆண்டுகளில் பல கோடி சிவனடியார்கள் இதை வாழ்ந்து நிரூபித்துள்ளார்கள்;

முறையான வழிபாட்டை அறிய ஒருமுறை நேரில் எம்மை உங்கள் ஜாதகத்துடன் சந்திக்கவும்;கை.அருணமுனி என்ற கை.வீரமுனி. . .வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் 9092116990 அல்லது 9364231011 ஸ்ரீவில்லிபுத்தூர்,விருதுநகர் மாவட்டம்;


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ 

No comments:

Post a Comment