Saturday, September 3, 2016

மனைவியை நேசிக்கும் கணவன் !!

அவளையும் நேசியுங்கள்
******************************
காபியும் குடித்து முடித்து, சர்வர் பில் கொண்டுவர சென்றபோதுதான் தூக்கிவாரிப்போட்டது பாஸ்கருக்கு. பேன்ட் பாக்கெட்டில், சட்டைப் பையில் எங்கும் பர்ஸ் இல்லை.
“வித்யா! பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன். நீ உடனே ஒரு ஆட்டோ பிடிச்சுக்க. நேரே வீட்டுக்குப்போ. பணம் எடுத்துக்கோ. போன ஆட்டோவிலேயே திரும்பிடு. போக வர முப்பது ரூபாதான் ஆகும். நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்றான் தன் மனைவியிடம்.
“ஏங்க, அதுக்கு நீங்க பைக்கிலேயே போயிட்டு வந்துடலாமே?” என்றவளை, “சொன்னதைச்செய்” என்று கடுப்பாகச்சொல்லி விரட்டினான்.
கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு, ஓரமாக இருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்துகொண்டான்.
அரை மணியில் வித்யா பணத்துடன் திரும்பினாள். ஓட்டல் பில்லை செட்டில் பண்ணிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.
பைக்கில் போகும்போது, “போக வர ஆட்டோவுக்கு தண்டச்செலவு. எனக்கும் அலைச்சல். நீங்களே பைக்ல போயிட்டு வந்திருந்தா பத்து நிமிஷத்துல வேலை முடிஞ்சிருக்கும். சொன்னா கேட்டாதானே?” என்று சிணுங்கினாள் வித்யா.
சிரித்தான் பாஸ்கர். “மேடத்துக்கு என் மேல ரொம்ப கோபம் போலிருக்கு?” என்றவன், “யோசிச்சுப்பாரு வித்யா! பத்து நிமிஷமே ஆனாலும், முள்ளுமேல உட்கார்ந்திருக்கிற மாதிரி இருக்காதா உனக்கு? அதோட, கொஞ்ச நேரத்துக்குதான்னாலும் என் அருமை பெண்டாட்டியை அடமானம் வெச்சுட்டு போக என் மனசு ஒப்புமா, சொல்லு?” என்றான்.
தனது கணவனுக்கு தன்மேல் இருந்த அன்பின் ஆழம் புரிந்து அன்போடு இறுக கட்டியணைத்தாள் வித்யா.
நண்பர்களே...!!!
உங்கள் வாழ்வில், உங்கள் வாழ்வின் இறுதிவரை, உங்கள் கைகோர்த்து, உங்களுக்காக வருபவள் உங்கள் மனைவி. எனவே உங்களை போலவே.... முடிந்தால் உங்களை விட அதிகமாகவே அவளையும் நேசியுங்கள்.

No comments:

Post a Comment