Saturday, September 3, 2016

மந்திரம் சொன்னால் தெய்வம் வருமா?

-----------------------
ஆன்மீகத்தின் மிக முக்கியமான பதிவு இது. நிறைய மனிதர்களுக்கு குரு மூலம் உபதேசம் வாங்கி ஞானமடைவதற்கு இன்னும் பத்து சதவீதமே இருக்கும் நிலையில் "நாம் செல்லும் வழி சரிதானா?" என்ற சந்தேகம் தோன்றி விடும்.
மந்திர ஜபத்தின் மூலம் சாதாரண மனிதன் என்ற நிலையை விட உயர்ந்த நிலையை அடையலாம். ஆனால் இதனை அடைவதற்கு சில எதிர் மறை சக்திகள் தடையாக இருக்கும். வைராக்கியத்துடன் போராடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
நம் சொல்லும் மந்திரம் சித்தி அடைகிறது என்பதற்கும், நமக்கு அவநம்பிக்கையை களைந்து நம்பிக்கை ஊட்டுவதற்கும் சில நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்ந்து ஜபம் செய்பவரின் வீட்டில் இரவு பன்னிரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை கொலுசு சப்தமும், மணி சப்தமும் கேட்கும். தெய்வம் நம் வீட்டில் நடமாடுகிறது என்பதன் அடையாளம் இது.
நான் கடுமையாக ஜபம் செய்ய ஆரம்பித்தவுடன் எனது வீட்டில் மேற்கண்ட இரண்டு சப்தங்களும் இரவில் ஒலிக்க ஆரம்பித்தன.
எனது மனைவி பயந்து என்னை எழுப்பி "கொலுசு சப்தம் கேட்கிறது. பயமாக இருக்கிறது" என்று கூறுவார்.
நான் "நமது வீட்டில் அம்பாள் நடமாடுகிறாள் என்பதன் அடையாளம் இது. மகிழ்ச்சியாக இரு. அம்பாளுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்தியம் செய். அவள் நமக்கு வேண்டியதைக் கொடுப்பாள்" என்று கூறுவேன்.
இது எனது வீட்டில் உண்மையாக நடந்த விஷயம்.
குரு மூலமாக மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்யும் அன்பர்கள் நம்பிக்கையாக ஜபம் செய்யவும். நிச்சயம் தெய்வம் நம்முடைய வீட்டில் நடமாடும். நீங்கள் உயர் நிலை அடையலாம்.
நன்றி.Dr Yoga Rav

No comments:

Post a Comment