Saturday, September 3, 2016

ஆன்மீக நாடி பார்த்து வழி காட்டுதல்


வந்தவர் நாற்பத்தைந்து வயது பிராமணர். வெளி நாட்டில் பார்த்துக் கொண்டிருந்த வேலை பறிபோய் தற்போது சென்னையில் இருக்கிறார்.
ஆன்மீக நாடி பார்த்தேன். பூணூல் அணிந்த பிறகு பிராமணர்கள் மொட்டை அடிக்கக் கூடாது. ஆனால் என் தெய்வம் கருப்பண்ணசாமி சமயபுரம் சென்று மொட்டையடித்து, அர்ச்சனை செய்து வரச் சொல்லி உத்தரவிட்டார்.
அந்த நண்பரும் தயங்காமல் உடனே செய்து முடித்தார். மொட்டை அடித்து அர்ச்சனை செய்த பிறகு அங்கிருந்த குருக்கள் "அம்பாள் வீதி உலா வரப் போகிறாள். இருந்து வழிபட்டு செல்லுங்கள்" என்று சொல்லியிருக்கிறார்.
நண்பர் அம்பாள் புறப்படும் இடத்திற்கு சென்றவுடன் அங்கிருந்த ஒரு வயதான பெண்மணி "உனக்கு இப்போதுதான் இங்கு வர வழி தெரிந்ததா? இங்கு அமர்ந்திருந்து அம்பாள் வீதி உலா செல்லும்போது கூடவே சென்று வழிபட்டு பிறகு புறப்படு. இனி நல்லதே நடக்கும்" என்று கூறியிருக்கிறார்.
நண்பரும் அவ்வாறே வழிபட்டு முடித்து சென்னை வந்து விட்டார்.
சரியாக நாற்பத்து எட்டு நாட்களுக்குள் அவர் வேலை செய்த வெளிநாட்டு நிறுவனத்தின் மேலாளர் முன்பை விட அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கான விசா அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார்.
நண்பர் மிக்க மகிழ்ச்சியுடன் என்னுடன் செய்தியை பகிர்ந்து கொண்டார்.
குருவருளும் இறையருளும் துணை நிற்கின்றன. தெய்வம் நல்வழி காட்டுகிறது.
குருநாதருக்கும் தெய்வ சக்திக்கும் நன்றி.

No comments:

Post a Comment