17.4.2011 ஞாயிறு மற்றும் 18.4.2011 திங்களில் சித்ரா பவுர்ணமி வருகின்றது.பஞ்சாங்க வேறுபாடுகளின் படி சிலவற்றில் 16.4.2011 சனிக்கிழமையன்றும் ஆரம்பிப்பதாக சொல்லுகின்றனர்.உங்களது காலண்டர் அல்லது ஜோதிடர்களின் ஆலோசனைப்படி,சித்ரா பவுர்ணமிநாளில் நமது வீட்டு மொட்டை மாடியில் அல்லது அருகிலிருக்கும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கோவில்களில் மஞ்சள் விரிப்பு விரித்து,இரண்டு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து கைகளை மடக்கியவாறு குறைந்தது ஓரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.
(எனது ஊரில் இதோ மின் வெட்டு வந்துவிட்டது.எப்போது வேண்டுமானாலும் இந்த கணினி செயலிழக்கலாம்.எனவே,விவரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்)
15.4.11 முதல் ஒரு நாளுக்கு குறைந்தது ஐந்து மணி நேரம் வரையிலும் மின் வெட்டு இருக்குமாம்.ஆன்மீகக் கடலை தொய்வின்றி நடத்திட ஓம்சிவசிவஓம் கூடுதல் நேரமெடுத்து ஜபிக்க வேண்டுகிறேன்.
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment