Thursday, December 16, 2010

srivilliputhur mirror room

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகை:



நமது பிரச்னையை தீர்க்கும் கண்ணாடி






விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்திருப்பது நாச்சியார் அம்மன் எனப்படும் ஸ்ரீஆண்டாள்.இங்கு ஒரு கண்ணாடி மாளிகை இருக்கின்றது.கண்ணாடி மாளிகை மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்தது என பலவித ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.40 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சி செய்த திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களும் இதை உறுதிபடுத்தியுள்ளார்.






உங்களது நீண்டகாலப்பிரச்னைகள் தீர ஒரு சுலபப் பரிகாரம்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று ஆண்டாளுக்கு அர்ச்சனை செய்யவும்.(நம் பெயரில்தான்).பின்னர் கண்ணாடி மாளிகைக்குள் கைகூப்பிய வண்ணம் உங்களது ரூபத்தைப் பார்த்தபடி 16 சுற்று சுற்றுங்கள்.பின்னர்,அதைவிட்டு வெளியே வந்து ஒரு மாட்டிற்கு(கோவில் அருகே அல்லது நமது தெருவில்/ஊரில்)6 பழங்கள் வாங்கிக் கொடுங்கள்.






இப்படி சௌகரியப்பட்ட நாட்களில் 9 நாட்கள் தொடர்ந்து அல்லது விட்டு விட்டோ செய்ய வேண்டும்.


அடுத்த சில வாரங்களில் எல்லாப்பிரச்னைகளும் தீர்ந்துவிடுகின்றன.


சிலருக்கு ஒரே தடவையிலும்,சிலருக்கு 9 தடவைக்குள்ளும்,சிலருக்கு 9 தடவை இப்படி செய்து முடித்தப்பின்னரும் பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.இதற்கு எந்த வித நாள்,நட்சத்திரமும் பார்க்க வேண்டாம்.



No comments:

Post a Comment